3 policemen transferred in the case of female

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா(36). இவர், கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டு தாளில் தன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அதிகாலையில் வந்து இழுத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் சாகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

Advertisment

இந்த சம்பவத்தில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி மற்றும் கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் என 6 பேர் தன் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

Advertisment

நடவடிக்கை கோரி உறவினர்கள், அரசியல் கட்சியினர் மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் நீலகண்டன் கொடுத்த புகாரையும் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனைக்கு போகமாட்டோம் என்று கூறினார்கள். இந்த நிலையில், நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் கோகிலா வீட்டிற்கு விசாரணைக்கு வந்து காத்திருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கும் வரை விசாரணைக்கு வரவில்லை என உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தைநடத்தினார். போலீசார் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதை உறவினர்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோகிலாவின் அருகில் இருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கீரமங்கலம் எஸ்.ஐ ஜெயக்குமார் மீமிசலுக்கும், பெண் போலீஸ் கிரேசி மணமேல்குடி, புவனேஸ்வரி நமணசமுத்திரம் ஆகிய காவல் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை செய்யும் காவல் அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.