Skip to main content

விரைவில் அமலுக்கு வரும் 3 சட்டங்கள்; பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
3 laws coming into effect soon; Lawyers who neglected assignments

நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களான சிஆர்பிசி, ஐபிசி மற்றும் எவிடன்ஸ் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு வழக்கறிஞர்கள் மற்றும் பார் சங்கத்தினர் நீதிமன்றப் பணிகளை இன்று புறக்கணித்தனர்.

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.பி.துரைசாமி, செயலாளர் கே.சண்முகசுந்தரம் ஆகியோர் இன்றைய பணிப்புறக்கணிப்பு குறித்து கூறுகையில், 'தேசத்தில் சமஸ்கிருதத்தில் உள்ள சட்டங்களின் திருத்தங்கள் மற்றும் தலைப்புகளை மாற்றுவதற்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மசோதாக்கள் அல்லது சட்டங்கள் ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரிட்டது. தவிர, புதிதாக திருத்தப்பட்ட சட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளன. வழக்கறிஞர்கள் பல இடங்களில் குண்டர்களால் தாக்கப்பட்டதால், மத்திய அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வரக்கோரி நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அனைத்து பால் கேன்களுக்கும் ஜிஎஸ்டி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'GST for all milk cans' - Nirmala Sitharaman announcement

டெல்லியில்  53 வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

Next Story

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Demonstration demanding the passing of the Lawyer Protection Act

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.