Skip to main content

280 கோடி மோசடி விவகாரம்!!! -சூரப்பாவிடம் ஆடிட்டர் உதவியுடன் விசாரணை நடத்த திட்டம்

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
கத

 

 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்திருக்கிறது. இந்த அதிரடி அரசாணை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் வெடித்தபடி இருந்தன. 

 

இந்த நிலையில், சூரப்பா மீது பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீது கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் மீது தமிழக அரசு அதிரடியாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை கமிஷன் தலைவர் கலையரசன் சில தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி, சூரப்பா மீது 280 கோடி நிதி மோசடி கூறப்பட்டுள்ளதால், சூரப்பாவை நிதி அலுவலர்கள் மற்றும் ஆடிட்டர்களை கொண்டு விசாரணை நடத்த திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Summons  to Surappa

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பணியாற்றிய பொழுது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கணக்கு தணிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பணியாளர்களை நியமிப்பதில் முறைகேடு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு, மதிப்பெண்களை அச்சிடுவதில் முறைகேடு என சூரப்பா மீது  குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

அதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் கணக்குத் தணிக்கை குழு, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

Next Story

சூரப்பாவுக்கு விசாரணை அறிக்கையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

High Court orders to submit inquiry report to Surappa!

 

நீதியரசர் கலையரசன் விசாரணை குழுவின் அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்த போது, முறைகேடு செய்ததாக சூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், இதை விசாரிப்பதற்காக நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைத்தது கடந்த அ.தி.மு.க. அரசு. இந்த ஆணையத்தை எதிர்த்து, சூரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், விசாரணை நடைபெறுவதாகவும், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு தெரியாமலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே. இந்த விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், தனக்கு அறிக்கை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

 

இந்த வழக்கு இன்று (11/02/2022) நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தின் அறிக்கை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப முடியும். அதன் மீது அவர் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரரான சூரப்பாவுக்கு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 

 

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு தர முடியாது என்றும் மனுதாரருக்கு கூற முடியாது என்றும், அதில் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து, அவர் விளக்கு அளிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டறிவது அரசின் கடமை என்றும் உத்தரவிட்டுள்ளார். 

 

ஆளுநருக்கு அறிக்கையை அனுப்புவதற்கு முன்பாகவே, அடுத்த இரண்டு வாரங்களில் இந்த அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும். அறிக்கை கிடைத்த நான்கு வாரங்களில் சூரப்பா அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.