Skip to main content

திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் 'முதல்' அச்சகத்துக்கு 200 வயது! - சிறப்புத் தபால் தலை வெளியிட்டு கொண்டாட்டம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

200 years for the first printing of the kingdom of south diruvithangur

 

பண்டைய காலங்களில், பறையடித்தும், முரசு அடித்தும் தகவல்களைப் பரிமாறி வந்தனா். அதன்பிறகு, கல்வெட்டுகள், தோல், களிமண் மற்றும் பனை ஓலைகளில் எழுத்து வடிவமாகக் கொண்டுவந்தனா். பிற்காலங்களில் இதையெல்லாம் ஆவணப்படுத்துவதற்கு வசதியாகக் காகிதத்தைக் கண்டுபிடித்து அதில் இறகுகள் மூலம் எழுதினார்கள். 

 

இந்த நிலையில் தான் எழுத்தில் ஒரு புரட்சி உருவாகும் விதமாக அச்சு என்பது கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அச்சு வளா்ச்சி இந்தியாவில் பரவிய போது, அச்சில் கோர்த்து வெளியான முதல் எழுத்து, தமிழ் எழுத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அச்சு இயந்திரம், தென் திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் “லண்டன் மிஷனரி”யால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

200 years for the first printing of the kingdom of south diruvithangur

 

குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அப்போதைய தென் திருவிதாங்கூரின் சி.எஸ்.ஐ திருச்சபையின் அப்போஸ்தலா் என்றழைக்கப்படும் அருட்திரு வில்லியம் தொபியாஸ் ரிங்கல் தௌபே, அருள் பணியாளராக 1806 ஏப்ரல் 25-ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். இங்கு மக்களின் அறியாமை இருள் அகல கல்வியையும் அருட்பணியோடு இணைத்துக் கொண்டார். 

 

அருட்பணிக்காகவும் மக்களின் கல்வியறிவுக்காகவும் கல்விக்கான பாடத்திட்டங்களை அச்சிட அச்சகத்தின் தேவையை லண்டன் அருள்பணி சங்கத்துக்கு எழுதினார். அதன்பிறகு, இவருக்கு அடுத்து 1817-ல் வந்த சார்லஸ் மீட் ஐயா் முயற்சிகள் மேற்கொண்டு, 1920-ல் தரங்கம்பாடியில் இருந்து அச்சு இயந்திரம் நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓரு சிறிய அறையில் நிர்மாணிக்கப்பட்டது. 

 

200 years for the first printing of the kingdom of south diruvithangur

 

பின்னா் 1821 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தென்திருவிதாங்கூரின் முதல் அச்சகம் “லண்டன் மிஷன் அச்சகம்” என்ற பெயரில் அச்சுப் பணிகளை தொடங்கியது. “ஆத்மபோதம்” எனும் நூல் முதலில் அச்சிடப்பட்டது. இதைத் தொடா்ந்து திருமறையின் பகுதிகள், மாத இதழ், துண்டுப் பிரசுரங்கள், பள்ளிக்கூடப் பாடபுத்தகங்கள் எனத் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டன. அச்சகத்துக்கான காகிதம், அச்சுகள், படத்தட்டைகள் லண்டனில் இருந்து தான் வந்தன. 

 

அதன்பிறகு 1830-ல் நெய்யூா், 1831-ல் கொல்லம் ஆகிய இடங்களில் அச்சகம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவிலே சிறுவா்களுக்கான முதல் இதழ் ‘பாலதீபிகை’ இங்கு தான் அச்சிடப்பட்டது. இங்கு அச்சிடப்பட்டு 160 ஆண்டுகளாக தொடா்ந்து இப்போதும் வெளியாகிக் கொண்டிருக்கும் மாத இதழ் 'தேசோபகாரி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித் தோன்றிய திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் முதல் அச்சகத்துக்கு இன்றைக்கு வயது 200. இதைப் பெருமைப்படுத்தும் விதமாக தபால் துறையின் சார்பில் சிறப்புத் தபால் தலை வெளியிட்டு குமரி சி.எஸ்.ஐ பேராயத்தினா் கொண்டாடி வருகின்றனா்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மாட்டின் தலையை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி? போலீசார் விசாரணை

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Conspiracy to overturn a train with a cow's head in nagercoil

காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (20-02-24) இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் திடீரென கற்களின் மீதி மோதியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.