Skip to main content

தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 19 வயது பெண் உயிரிழப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
A 19-year-old girl Lose after being trapped under the wheel of a private bus

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இன்று வேலூரில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அரப்பாக்கம் நோக்கி தனது இரண்டு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடந்துவருகிறது. அப்பகுதியைக் கடக்கும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து லேசாக வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் வெங்கடேசனின் இரண்டாவது மகள் சுவேதா (19) மீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தங்கள் கண் முன்னே ஒரு மகள் பேருந்து சக்கரத்தில் நசுங்கி இறந்துயிருப்பதை பார்த்து வெங்கடேசனும், மற்றொரு மகளும் கதறி அழுதனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை என்பது மிக முக்கியமானது. 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை கடக்கும். அப்படிப்பட்ட சாலையில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் நடைபெறும் பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகின்றன.

விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பின்னர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். பாலத்தின் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் அவ்வப்போது இதுபோன்ற தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பல மணி நேர போராட்டம்; பிடிபட்டது சிறுத்தை!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The leopard was caught in thiruppattur

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் நேற்று (14-06-24) மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து, பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் நேற்று இரவு ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வந்தது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்திய நிலையில், 11 மணி நேரத்திற்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர். 

Next Story

இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதி விபத்து; ஓட்டுநர் கைது!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
salem dt sukkampatti village bus lorry two wheer incident

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நேற்று (12.06.2024) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி லட்சுமணன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயதுக் குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர்,  இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

salem dt sukkampatti village bus lorry two wheer incident

வேகத்தடை இருப்பதால் மெதுவாகச் சென்ற லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பேருந்தின் ஓட்டுநர் ரமேஷை வீராணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.