Skip to main content

பரோட்டா மாஸ்டர் கொலையில் 17 வயது சிறுவன் கைது

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

17-year-old boy arrested Dharmapuri parotta master case

 

பென்னாகரம் அருகே, பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை  செய்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லாமல் உறவினர்களுடன் மதுபானம் குடித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அவருடைய வீட்டின் முன்னால் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடைய  தலையின் பின்பக்கத்தில் ரத்த காயம் இருந்துள்ளது. குடிபோதையில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது யாராவது  அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.     

 

இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.  சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.  

 

பென்னாகரம் அருகே உள்ள மாரண்டஅள்ளி புதூரைச் சேர்ந்தவர் முரளி. இவர், கொலையான கணேசனின் தங்கை கணவர் ஆவார். அவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார்.  சம்பவத்தன்று மது போதையில் இருந்த கணேசன், முரளியையும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். இதைக்கேட்டு  ஆத்திரம் அடைந்த சிறுவன், கணேசனை கீழே தள்ளி விட்டுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருடைய தலையில் பலத்த காயம்  ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.