Skip to main content

7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனிநபரின் 1,500-வது நாள் இணையவழிப் போராட்டம்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

The 1500th day of the individual's online struggle to demand the release of 7 people


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 நாட்களாக இணையவழி தனிநபர் போராட்டம் நடத்தி, இன்று தனிநபராக ஊர்வலமும் நடத்தியுள்ளார்.

 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 'முனைவர் ஜீவா' என்ற தனது முகநூல் பக்கத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 தினங்களாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இன்று டிசம்பர் 12 சனிக்கிழமை 1,500 வது நாள் நிறைவையொட்டி, பழைய பேராவூரணியில் இருந்து பேராவூரணி அண்ணா சிலை வரை தனிநபராக, சட்டையின் இருபுறமும் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.  

 

இது குறித்து முனைவர் ஆ.ஜீவானந்தம் கூறும் போது,

 

The 1500th day of the individual's online struggle to demand the release of 7 people

 

"30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இதில் எவ்வித முடிவும் எடுக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிலுவையில் உள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி, முடிவு எடுத்து உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இணையவழியில் எனது முகநூல் பக்கத்தில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டேன். இன்று 1,500-வது நாள் என்பதால் நடைப்பயணம் வந்தேன்'' என்றார்.

 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி தனி நபர் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.