Skip to main content

வேலையிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி! தாய் தந்தையை கட்டிவைத்து கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

150 pawn gold stolen near tenkasi valliyur

 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்தவர் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இருவரும் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், இளைய மகளும், மகனும் திருமணமாகி வெளியூர்களில் வேலையிலிருக்கின்றனர். இவரது மூத்த மகள் ராணி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்துவருகிறார். இவர் தினமும் வேலையை முடித்துவிட்டு வள்ளியூரிலிருந்து இரவு 9 மணிக்குள்ளாக வீடு திரும்பிவிடுவார். 

 

நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற ராணியால் 9 மணிக்குள் வீடு திரும்பமுடியாமல் போயிருக்கிறது. அன்றைய இரவு 7 மணியளவில் அருணாசலம் வீட்டினுள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே திண்ணைப் படியில் ஜாய்சொர்ண தேவி அமர்ந்திருந்தார். அப்போது நான்கு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து ஜாய்சொர்ணதேவியிடம் விலாசம் கேட்பது போன்று பேசியுள்ளனர். அப்போது, திடீரென்று அவரைக் கம்பால் தாக்க மயங்கியிருக்கிறார் சொர்ணதேவி. பின்னர் அவரை இழுத்துச் சென்று படுக்கையறையில் போட்டிருக்கிறார்கள். சத்தம் பேட்டு வெளியே வந்த அருணாச்சலத்தையும் தாக்கியவர்கள், அவரின் கைகால்களைக் கட்டி அதே படுக்கையறையில் அடைத்தனர். 

 

அதன்பின் மேஜையிலிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 150 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள், 10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிய மகள் ராணி, பெற்றோரைத் தேடியுள்ளார். அப்போது படுக்கையறையில் தன் தாயும் தந்தையும் மயக்கத்தில் முனங்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. காயங்களோடு மயங்கிக்கிடந்த தாயையும் தந்தையையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தவர், பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். தகவலறிந்த தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

மேலும் மோப்ப நாய் கொண்டு சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 4 ரோடுகளை சுற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துள்ளது.

 

அண்மையில், தன், நிலத்தை விற்ற அருணாசலம் அதன் பணத்தையும் வீட்டில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் வந்த கொள்ளையர்கள் பனிக்காலங்களில் அணியும் மங்கிகுல்லா அணிந்திருந்ததாகவும், சகஜமாகவே வந்தார்கள் என்பதும், பலநாட்கள் நோட்டமிட்டு தம்பதியருக்கு அறிமுகமானவர்களே ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

தனியே இருந்த தம்பதியைத் தாக்கி நடத்தப்பட்ட மெகா கொள்ளைச் சம்பவம் பாவூர் சத்திர வட்டாரத்தை பீதியில் தள்ளியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.