ரேஷனில் கரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. கலைஞர் பிறந்த நாளான ஜீன் 3ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.