Skip to main content

சாராய கடத்தல் வழக்குகளில் பறிமுதல் ஆன 127 வாகனங்கள் மார்ச் 23- ல் பொது ஏலம்!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

127 vehicles seized in smuggling cases to be auctioned off on March 23!

 

சேலம் மாவட்டத்தில் சாராய கடத்தல் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 127 வாகனங்கள் மார்ச் 23- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

 

சேலம் மாவட்டத்தில் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 6, ஆட்டோ 1, இருசக்கர வாகனங்கள் 120 என மொத்தம் 127 வாகனங்களை மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரும்பாலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு முடிந்த பிறகு, அவை பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு விடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. 

 

அதன்படி, மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் மார்ச் 23- ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. காலை 10.00 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் மார்ச் 21, 22- ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாகனங்களைப் பார்வையிடலாம். 

 

இருசக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், இதர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துக் கொள்ள முடியும். 

 

ஏலம் எடுத்தவுடன் வாகனத்திற்கு உரிய தொகையை ஜிஎஸ்டி வரியுடன் முழுமையாக செலுத்தி, வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. அலுவலகத்தை நேரில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.