Skip to main content

1.20 கோடி ரூபாய் தொட்டியில் நீர் கசிவு; பயன்பாட்டிற்கு முன்பே பல்லிளிக்கும் நீர்த்தேக்க தொட்டி

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

nn

 

 

நீர்த்தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர் கசியும் நிலையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மத்திய அரசின் 'அம்ரு' திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் ஏழாவது வார்டு பகுதியில் சுமார் ஒரு 1.20 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காக காத்திருக்கும் இந்த நீர் தொட்டியில் சோதனை முறையாக நீரானது நிரப்பப்பட்டது. அப்பொழுது தொட்டியைச் சுற்றிலும் நீர்க்கசிவு ஏற்பட்டது.

 

தரமற்ற முறையில் கட்டுமானம் இருப்பதால் நீர் கசிவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதேபோல் 20 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றையும் ஆய்வுசெய்து அவற்றின் கட்டுமானங்களை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

தஞ்சை மேயர் சார்பில், 'கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தொட்டிகள் கட்டப்பட்டது. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சோதனை செய்யப்பட்டது. முறையாக சீரமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே மக்கள் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.