Skip to main content

10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Is 10.5 per cent reservation will stop

 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கென 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலாலின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 

இந்த நிலையில், மஹாராஷ்ட்ரா மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், தமிழக அரசு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது. 

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 2018இல் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தார். மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட வருடங்களாக இருந்த வந்தது.

 

இதனை ஏற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூக மக்களுக்காக 16 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி, மாநில சட்டசபையில் சட்டம் நிறைவேற்றினார் தேவேந்திர பட்னவிஸ். இதற்கு மாநில கவர்னரும் ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன் கல்வியில் 13 சதவீதமும், வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் மட்டுமே மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலானது. இந்த வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்து வந்த அசோக்பூஷன், எல்.என். ராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திரபட் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று (5.5.2021) தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், “அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில்தான் 50 சதவீதத்துக்கு அதிகமான இடஒதுக்கீட்டை பரிசீலிக்கலாம். ஆனால், மராத்தா மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அசாதாரணமான சூழல் நிலவவில்லை. கல்வி மற்றும் பொருளாதார நிலையிலும் மராத்தா மக்கள் பின்தங்கியிருக்கவில்லை. அதனால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இந்தச் சட்டத்தால் பலனடைந்தோருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த தீர்ப்பு மஹாராஷ்ட்ராவில் அதிர்வுகளை ஏற்படுத்த, தமிழகத்திலும் இதுகுறித்த விவாதங்கள் எழத் துவங்கிவிட்டன. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வழங்கப்பட்ட வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கும் ஆபத்து சூழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் இந்த  சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில்தான், மராத்தா மக்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள தீர்ப்பு பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மராத்தா மக்களுக்கு அந்த மாநில அரசு வழங்கியது தனி இடஒதுக்கீடு! ஆனால், வன்னியர் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியிருப்பது உள் இடஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று வகைப்படுத்திதான் வன்னியர் சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு. அதனால், மராத்தா மக்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு, 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Next Story

பொய் விளம்பரம்; மன்னிப்பு கேட்ட பதஞ்சலி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
false advertising; Patanjali apologized

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்து உணவு மற்றும் மருத்துவ பொருட்களை விற்று வருகிறது. இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பதஞ்சலி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் ராம்தேவ்க்கு கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொய் விளம்பரங்களைப் பரப்புவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.