Skip to main content

100 நாள் வேலைக்கு வந்த பெண்கள் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு; கொடூரன் கைது

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

100-day work women's struggles; Aggrieved villagers; Arrest of the villain

 

100 நாள் வேலைக்கு வந்த பெண்களை தவறாக படம் பிடித்து ஆபாசமாக வீடியோக்களை சித்தரித்து செல்போனில் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதி மக்கள் திடீரென சென்னையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அங்கிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. அதே நேரம் வீரசோழபுரம் பகுதியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் வீடானது அடித்து நொறுக்கப்பட்டது. இப்படி வீரசோழபுரம் கிராமத்தில் அனைவருமே போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. போலீசாரின் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நள்ளிரவில் இந்த போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த நாள் காலை அதே பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இத்தனை போராட்டத்திற்கும் காரணம் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனின் கொடூர செயல்தான். வீரசோழபுரம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும் கூலி வேலையும் தான். அதிலும் பெண்கள் அதிகம் பேர் 100 நாள் வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் போட்டோக்களை வசந்தகுமார் என்பவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார். திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனான இவர் 100 நாள் வேலை திட்டத்தின் பொறுப்பாளராக இருந்துள்ளார். அடிக்கடி பெண்கள் வேலை செய்யும் பகுதிக்குச் சென்று வேலைகள் சரியாக நடக்கிறதா என்பதை பார்வையிடுவது போல் பெண்களை வீடியோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் பதுக்கி வைத்து அவ்வப்போது பார்த்து வந்துள்ளார்.

 

கடந்த இரண்டு வருடங்களாக இதே வேலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவருடைய கைபேசியை நண்பரான தினேஷ் குமார் என்பவரிடம் 2000 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். தினேஷ் குமார் அந்த செல்போனை அன்லாக் செய்து பார்த்தபோது ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அவர் சமூக வலைதளங்களில் ஃபார்வேர்ட் செய்ய, ஊர் முழுக்க இந்த ஆபாச படங்கள் பரவியது. இதனால் ஒட்டுமொத்த கிராமமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தலைமறைவான வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் வாங்கப்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நம்பவைத்து மோசம் செய்த பொறியாளர்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Engineer arrested by police who cheated girl

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் வனிதா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண். பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்து இருந்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி யோகேஷ் (28) என்பவர், தரகர்கள் மூலம் விவரங்களை அறிந்து, வனிதாவை பெண் கேட்டுச் சென்றார். 

கடந்த ஜூலை மாதம் யோகேஷ் பெண் பார்க்கச் சென்றபோது, தன்னுடன் தாயார் ஜீவா (52), சின்ன சேலத்தைச் சேர்ந்த அவருடைய மாமா தமிழரசன் (39), அக்கா ஜெயஸ்ரீ (34) ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். இருதரப்புக்கும் பிடித்துப்போன நிலையில், செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். பெண் பார்க்கும் படலத்தின்போதே வனிதாவுக்கும், யோகேஷூக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்ததால், இருவரும் அப்போது முதல் சகஜமாக அலைபேசியில் பேசி வந்துள்ளனர். 

அலைபேசிவழி பேச்சு, சில நாள்களிலேயே நேரடி சந்திப்பு வரை சென்றது. பின்னர் இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பல இடங்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்று வரும் அளவுக்கு நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கம் அவர்களை திருமணத்திற்கு முன்பே தனிமையில் இருக்கும் அளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் இவர்கள் சொகுசு விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி யோகேஷ், புதிய உடைகள், மோதிரம் வாங்க வேண்டும் எனக்கூறி வனிதாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். 

தன்னுடனான நெருக்கத்தை திடீரென்று யோகேஷ் குறைத்துக் கொண்டதால், இதுபற்றி விசாரித்தபோதுதான் வனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனிதா, யோகேஷின் வீட்டிற்கே சென்று சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், வனிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அவருடைய தாயார், மாமா, அக்கா ஆகியோர் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

யோகேஷ்தான் எதிர்காலத்தில் தனது கணவராக வரப்போகிறான் என்று எண்ணியிருந்த வனிதாவால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் யோகேஷ், அவருடைய தாயார், அக்கா, மாமா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். 

இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யோகேஷை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் யோகேஷை அரூர் சிறையில் அடைத்தனர். 

Next Story

பெண்ணை ஏமாற்றிய மேனஜர்! கொல்கத்தாவில் வளைத்து பிடித்த தமிழ்நாடு போலீஸ்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
The manager who cheated on the woman! Tamil Nadu police arrested in Kolkata

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் சரக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வர, 42 லட்சம் ரூபாய் சரக்கு புக்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த இந்தோனேசிய நிறுவன ஊழியரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து கப்பலில் சரக்குகளைக் கொண்டு வருவதற்காக ஆன்லைன் மூலம் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். 

அந்த நிறுவனத்தினரும், சுண்ணாம்புக்கல் சரக்குகளை காரைக்கால் துறைமுகத்திற்குக் கப்பலில் கொண்டு வந்து இறக்கிவிட ஒப்புக்கொண்டு, 42.42 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பூவிழி செலுத்தினார். சரக்கு புக்கிங் செய்த நிறுவனம், அதன்பிறகு பூவிழியை தொடர்பு கொள்ளவே இல்லை. சரக்கும் குறிப்பிட்ட நாளில் வந்து சேரவில்லை. இதுகுறித்து பூவிழி தரப்பில் விசாரித்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தார் திட்டமிட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சரக்கு புக்கிங் செய்த இந்தோனேசிய நிறுவனத்தின் கிளை கொல்கத்தாவில் இயங்குகிறது. அங்கு மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.சி.ஜனா (45), ஊழியர்கள் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். 

இவர்களில் எஸ்.சி.ஜனா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த சேலம் மாவட்டக் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், பூவிழியிடம் மோசடியாக பெற்ற பணம், இந்தோனேசியாவில் உள்ள தீபக்கிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஜனாவை காவல்துறையினர் சேலம் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய தீபக் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.