Skip to main content

"அதிமுக ஆட்சியில் புதிதாக ஒரு பகுதிநேர ரேசன் கடையைக் கூடத் திறக்கவில்லை"- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

"In 10 years of ADMK government, not even a new part-time ration shop has been opened"- Minister I.Periyaswamy speech!


அ.தி.மு.க. ஆட்சியில் 10 வருடங்களில் புதிதாக ஒரு பகுதி நேர ரேசன் கடையைக் கூட திறக்கவில்லை என்று நரசிங்கபுரத்தில் நடைபெற்ற புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தில் டி.டி.36 சித்தையன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக புதிய பகுதிநேர கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். 

 

மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திருமாவளவன், சரக துணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

விழாவில் நியாயவிலை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்துவிட்டு கூறுகையில், "கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உத்தரவுப்படி கிராமங்கள் தோறும் குறிப்பாக, 300 குடும்ப அட்டைகள் இருந்தால் அப்பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தோம். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு ஆத்தூர் தொகுதியில் ஒரு நியாயவிலைக் கடையைக் கூட புதிதாக திறக்கவில்லை. 

 

நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்குகிறோம் என்று சொன்னார்கள். அந்த சிரமம் கூட அவர்களுக்கு இருக்கக் கூடாது என இன்று நரசிங்கபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்துள்ளோம், கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஏழை, எளிய மக்கள் குறிப்பாக முதியோர்களுக்கு நாம் வழங்கிய நிவாரண உதவித்தொகையை கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. 

 

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கூட்டுறவுத்துறை வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் வாங்கி பயனடை ய வேண்டும்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.