Skip to main content

"இதுதான் எடப்பாடியின் அடுத்த அறிவிப்பு..." - ஸ்டாலின் சொல்லும் கணக்கு!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் இருந்து குறைகள் அடங்கிய மனுக்களை ஸ்டாலின் நேரில் வாங்கி வருகிறார். அதில் இன்று (6-ம் தேதி) நாகா்கோவில் வந்த ஸ்டாலின் ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, "அவா்களின் அனைத்து குறைகளையும், திமுக ஆட்சி வந்த 100 நாளில் தீா்ப்பேன்' என உறுதியளித்தார்.

 

மேலும், பொதுமக்கள் தாங்கள் கொடுத்த மனுக்களுக்கான ரசீதை வாங்கிக்கொண்டு அதைத் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த ரசீது அவ்வளவு முக்கியமானது. காரணம், திமுக ஆட்சி வந்ததும் உங்கள் குறைகள் தீா்க்கப்படவில்லையென்றால், அந்த ரசீதுடன் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து அந்தத் துறை அதிகாரிகளுடன் கேள்வி கேட்கலாம்.

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

அது மட்டுமல்ல முதல்வா் அறைக்குள் கூட அந்த ரசீதுடன் வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்றார் ஸ்டாலின். குமரி மாவட்டம் முமுமையான கல்வியறிவு பெற்ற மாவட்டம் மட்டுமல்ல பண்பாட்டிலும் சிறந்த மாவட்டம். இங்கு படித்த இளைஞா்கள் வேலையில்லாமல் அதிகம் போ் இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததும்  இந்த மாவட்டத்தில் படித்த இளைஞா்களின் வேலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி, ஊழல் ஆணையமாக மாறிவிட்டது. இதனால் தான் படித்த தகுதியானவா்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

 

2006-ல் திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் வரும் திமுக ஆட்சியில், கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜனவரி 13-ம் தேதி நான் அறிவித்தேன், உடனே எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டார். இன்னும் ஒரிரு நாளில் அடுத்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். 5 பவுனுக்கு நகைக்கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அறிவித்து இருக்கிறேன். எனவே இதையும் உடனே அறிவிப்பார். நாம் எதைச் சொல்லுகிறோமோ அதை எடப்பாடி செய்கிறார். யார் எதிர்க்கட்சி? யார் ஆளும் கட்சி? என்று தெரியவில்லை.

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

கடைசி நேரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து விட்டுத்தான் அணையும் என்பார்கள். அதே போல்தான் எடப்பாடியின் அரசு. தமிழகத்தில் நடப்பது அரை பாஜக, அரை அதிமுக ஆட்சி அதனால் தான் எல்லாமே அரை குறையாக உள்ளது. நீட் தோ்வு என்றால் ஆதரவும் கொடுப்பார்கள் எதிர்த்துத் தீா்மானமும் போடுவார்கள். 7 போ் விடுதலையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், விடுதலை ஆக விடமாட்டார்கள். இருமொழிக் கொள்கையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், இந்தி மொழியை ஆதரித்துத் தான் இருப்பார்கள்.

 

மாநில உரிமையில் தலையிடுவதை தடுப்பதாக நடிப்பார்கள். ஆனால், உரிமை கிடைக்காது. நிதி கேட்டு டெல்லிக்குச் செல்வார்கள். ஆனால், நிதி கிடைக்காமல் திரும்பி வருவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்கள். ஆனால், 3 ஆண்டுகளாகப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இப்படித் தான் அரைகுறையாக இருக்கிறது இந்த ஆட்சி" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.