Skip to main content

"இதுதான் எடப்பாடியின் அடுத்த அறிவிப்பு..." - ஸ்டாலின் சொல்லும் கணக்கு!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் இருந்து குறைகள் அடங்கிய மனுக்களை ஸ்டாலின் நேரில் வாங்கி வருகிறார். அதில் இன்று (6-ம் தேதி) நாகா்கோவில் வந்த ஸ்டாலின் ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, "அவா்களின் அனைத்து குறைகளையும், திமுக ஆட்சி வந்த 100 நாளில் தீா்ப்பேன்' என உறுதியளித்தார்.

 

மேலும், பொதுமக்கள் தாங்கள் கொடுத்த மனுக்களுக்கான ரசீதை வாங்கிக்கொண்டு அதைத் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த ரசீது அவ்வளவு முக்கியமானது. காரணம், திமுக ஆட்சி வந்ததும் உங்கள் குறைகள் தீா்க்கப்படவில்லையென்றால், அந்த ரசீதுடன் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து அந்தத் துறை அதிகாரிகளுடன் கேள்வி கேட்கலாம்.

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

அது மட்டுமல்ல முதல்வா் அறைக்குள் கூட அந்த ரசீதுடன் வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்றார் ஸ்டாலின். குமரி மாவட்டம் முமுமையான கல்வியறிவு பெற்ற மாவட்டம் மட்டுமல்ல பண்பாட்டிலும் சிறந்த மாவட்டம். இங்கு படித்த இளைஞா்கள் வேலையில்லாமல் அதிகம் போ் இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததும்  இந்த மாவட்டத்தில் படித்த இளைஞா்களின் வேலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி, ஊழல் ஆணையமாக மாறிவிட்டது. இதனால் தான் படித்த தகுதியானவா்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

 

2006-ல் திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் வரும் திமுக ஆட்சியில், கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜனவரி 13-ம் தேதி நான் அறிவித்தேன், உடனே எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டார். இன்னும் ஒரிரு நாளில் அடுத்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். 5 பவுனுக்கு நகைக்கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அறிவித்து இருக்கிறேன். எனவே இதையும் உடனே அறிவிப்பார். நாம் எதைச் சொல்லுகிறோமோ அதை எடப்பாடி செய்கிறார். யார் எதிர்க்கட்சி? யார் ஆளும் கட்சி? என்று தெரியவில்லை.

 

“Who is the opposition? Who is the ruling party? It does not seem that ”, - MK Stalin

 

கடைசி நேரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து விட்டுத்தான் அணையும் என்பார்கள். அதே போல்தான் எடப்பாடியின் அரசு. தமிழகத்தில் நடப்பது அரை பாஜக, அரை அதிமுக ஆட்சி அதனால் தான் எல்லாமே அரை குறையாக உள்ளது. நீட் தோ்வு என்றால் ஆதரவும் கொடுப்பார்கள் எதிர்த்துத் தீா்மானமும் போடுவார்கள். 7 போ் விடுதலையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், விடுதலை ஆக விடமாட்டார்கள். இருமொழிக் கொள்கையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், இந்தி மொழியை ஆதரித்துத் தான் இருப்பார்கள்.

 

மாநில உரிமையில் தலையிடுவதை தடுப்பதாக நடிப்பார்கள். ஆனால், உரிமை கிடைக்காது. நிதி கேட்டு டெல்லிக்குச் செல்வார்கள். ஆனால், நிதி கிடைக்காமல் திரும்பி வருவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்கள். ஆனால், 3 ஆண்டுகளாகப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இப்படித் தான் அரைகுறையாக இருக்கிறது இந்த ஆட்சி" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.