Skip to main content

''மோடி ஸ்டாலினை பார்க்கும்போதெல்லாம் ஒன்று சொல்லுவார்''- சுவாரசியம் பகிர்ந்த துரைமுருகன்!

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

"Whenever Modi sees Stalin, he says one thing" - Duraimurugan shared the impression on the stage!

 

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதோடு தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''நான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக நினைக்கக் கூடாது, அண்ணா ராஜ்ய சபாவிற்கு போன பிறகுதான் அவரது அறிவாற்றலை கண்டு அத்தனை பேரும் வாய் பிளந்து நின்றார்கள். நீண்ட காலம் அவர் டெல்லி வாசத்தில் இல்லை. அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். அவர் முதலமைச்சராகி முதல் முதலாக டெல்லிக்கு போன பொழுது அவரை மிக சாதாரணமாக நினைத்தார்கள். முதல் முதலில் அவர் மொரார்ஜி தேசாயை பார்க்கப் போனார். 5 மணிக்கு அவருக்கு அவகாசம் கொடுத்தார்கள். ஆனால் டிராபிக் ஜாமில் 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். போனவரை முதல் முறையாக ஒரு சீப் மினிஸ்டர் வருகிறார் என்று மொரார்ஜி தேசாய் 'வாழ்த்துக்கள் எப்படி இருக்கிறீர்கள், தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் உங்கள் சேவை தேவை' என்று சொல்லவில்லை கலைஞருக்கு வாழ்த்து கூட சொல்லாமல், மொரார்ஜி தேசாய் சொன்னாராம் 'நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதற்கு' என்று எடுத்த உடனே நெருப்பைக் கொட்டி இருக்கிறார்.

 

அந்த இடத்தில் கலைஞர் சொன்னார் 'அந்த நாற்காலியில் அமரக் கூட எனக்கு மனம் இல்லை. இருந்தாலும் நெருப்பின் மேல் உட்காருவது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்' என்று. அடுத்த கேள்வி கேட்டாராம் 'எங்கே வந்தீர்கள்' என்று, 'நிதி கேட்பதற்காக வந்திருக்கிறேன். நீங்கள்தான் நிதி அமைச்சர்' என்று கலைஞர் சொன்னாராம். அதற்கு 'நிதி எங்கே கொட்டி கிடக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கிறது உனக்கு அறுத்துக் கொடுப்பதற்கு' என்று இரண்டாவதாக சாடி இருக்கிறார். அதுவரையில் பொறுமைகாத்த கலைஞர் சொன்னாராம் 'பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது. பிறகு உம் தோட்டத்தில் எப்படி ஐயா இருக்கும்' என்று கேட்ட பொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் மொரார்ஜி.


 

"Whenever Modi sees Stalin, he says one thing" - Duraimurugan shared the impression on the stage!

 

அப்படி முதல் முறையிலேயே புறக்கணிக்கப்பட்ட தலைவர் பிறகு பிரதமர்களை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு யார் என்று கேட்டால் அது கலைஞரால்தான் முடியும் என்று இந்தியாவே ஒத்துக் கொண்டு போனது. ஆனால் ஸ்டாலின் கட்சியின் தலைவராகி, முதலமைச்சரான உடன் இன்றும் அதிகமாக அவருடைய கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை அகில இந்தியா ஒத்துக் கொண்டிருக்கிறது. நமக்குள் ஆயிரம் வேற்றுமை உண்டு பிஜேபிக்கும் நமக்கும். ஆனால் பிரதமர் மோடி ஸ்டாலினை பார்க்கிறபோதெல்லாம் சொல்வார் 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின். உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ வந்தால் என் வீட்டிலே தங்கு. உன்னை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்கிற அளவுக்கு இவருடைய கண்ணியம் பண்பாடு தலைதூக்கி நிற்கிறது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.