Skip to main content

“பார்க்கும்போதெல்லாம் மோடி இதைத்தான் எங்களிடம் சொல்கிறார்” - ஓபிஎஸ் ஓபன் டாக்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

ops

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

இந்த சந்திப்பிற்குப் பிறகு ஏ.சி.சண்முகம், பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''நேற்று தனது நிலைப்பாட்டை ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். நாங்கள் எல்லோருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அந்த கருத்தின் அடிப்படையில் அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் நாங்கள் இன்று இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதை அறிந்து, அந்த அடிப்படையில் அவரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளோம்.

 

பொதுவாகவே தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவதற்கு முன்னால் பல்வேறு கட்சிகளுடைய நிலைப்பாடு மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும். அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வார்கள் என்பது தான் கடந்த காலத்திலிருந்து நிதர்சனம். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் சொல்லி இருக்கிறோம். கூடிய விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக  நடுநிலை தொண்டர்கள், பிரிந்து இருக்கின்ற எம்ஜிஆரின் உடைய சக்தி, ஜெயலலிதாவின் சக்தி என அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. பிரதமரும் அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் இருக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறார். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதற்கு யார் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர், “பிரதமர் மோடி உங்களிடம் இதைச் சொன்னாரா?” எனக் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “எங்களை பார்க்கும்போதெல்லாம் மோடி இதைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.