Skip to main content

‘நடந்தது என்ன?’ - தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'What happened?' - Tamilisai Soundarrajan explained

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகையச் சூழலில்தான் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் (12.06.2024) ஆந்திராவில் நடந்தது. அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை ஏதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்து பேசினேன். அப்போது தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் மற்றும் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதம் பற்றி கேட்கதான் அவர் என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். இது தொடர்பாக விரிவாக கூற முற்படுகையில் போதிய நேரமின்மையால் பணிகளை தொடருமாறு அவர் அறிவுறுத்தினார். இது போன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

பட்டாக்கத்தியுடன் பாய்ந்த இளைஞர்; வைரலாகும் வீடியோ

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
A young man with a sword; A viral video

சென்னை பம்மலில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகன் பட்டாகத்தியுடன் இளைஞர் ஒருவரை வெட்ட முயலும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பம்மல் பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் 57வது ஆண்டு கொடி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் திடீரென இரண்டு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் லியோன் என்பவரின் மகன் லியோன்டா பட்டாக்கத்தியால் எதிர்த்தரப்பு இளைஞரை தாக்க முயன்றார். அங்கிருந்த நபர்கள் லியோன்டாவை தடுத்து நிறுத்தியதோடு இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.