Skip to main content

“தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு விழா நடத்தணும்” - நாதக வேட்பாளர் மேனகா 

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

"We will conduct a function of appreciation for the Election Commission" - ntk candidate Maneka

 

தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கூறியுள்ளார்.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

 

காலையிலேயே அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிவிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10,804 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “39 லட்சம் மட்டும் செலவு பண்ணி இந்த தேர்தலை அணுகி இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். நாம் தமிழர் கட்சி மக்களுக்காக நிற்கின்ற கட்சிதான். மக்களது வறுமையை பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டார்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழா நடத்துவார்கள். கூடவே தேர்தல் ஆணையத்திற்கும் சேர்த்து பாராட்டு விழா நடத்துங்கள். ஏனென்றால் அவர்கள் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு முறையும் நாங்கள் புகார் கொடுக்க சென்றபோது அப்படியா என கேட்ட தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயம் பாராட்டு விழா நடத்தணும்” என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா.?- சீமான் 

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Seeman speech on Veerappan

 

தமிழகம் முழுவதும் தேர்தல் கள தயாரிப்பு நிகழ்விற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான், இன்று திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் கள தயாரிப்பு நிகழ்விற்காக தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க வருகை புரிந்த பொழுது, செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

 

அப்போது மாதனூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது வரை பதவி ஏற்காமல் இருக்கும் பட்டியலின பெண் குறித்து கேள்வி எழுப்புகையில், “இது என்னிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி அல்ல. நீங்கள் தானே சொல்கிறீர்கள், சனாதனத்தை ஒழிப்போம். இது பெரியார் மண். சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஒரு பட்டியலின பெண் தேர்தலில் வெற்றி பெற்றும் தற்பொழுது வரை அவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைக்காததால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் வெறும் கனவாக இருக்கிறது. 

 

இது அந்த தங்கச்சிக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமாக நான் கருதவில்லை; ஒரு தேசிய இனத்திற்கான ஒவ்வொருத்தருக்கும் அவமானமாகத்தான் கருதுகிறேன்.” என்று கூறியவர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வளம் குறித்து பேசுகையில், “சந்தன மரங்களின் வளம் தான் இந்த மாவட்டத்திற்கான வருவாயாக இருந்தது. தற்பொழுது சந்தன மரங்கள் இல்லை. வனத்துறை அமைச்சர்கள் மீண்டும் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் (சந்தன கடத்தல் வீரப்பனை குறிப்பிட்டு) எங்க ஆளு இருக்கும் வரையில் காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தது. காவிரி பிரச்சனை போன்ற நிலை எல்லாம் இல்லாமல் இருந்தது. வீண் பழி சுமத்தி மரத்தை வெட்டினான், யானை தந்தத்தை கடத்தினார் என்று கூறி பழி போட்டு விட்டார்கள் அவர் இருக்கும் வரை காடு பாதுகாப்பாக இருந்தது. நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா? அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை ஏனென்றால் அவர் தமிழ் மாண்பு உடையவர் என்று கூறும்பொழுது சிரிப்பலை எழுந்தது. மேலும் வன பாதுகாப்பு குழு காட்டில் சந்தன மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Seaman ajar in court

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து கடந்த பிப்ரவ்ரி 13 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், அருந்ததியினர் சமூகம் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சீமான் மீது கடந்த மார்ச் 22 ஆம் தேதி எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 

இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அளித்திருந்தனர். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்