Skip to main content

“ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தின் ஒரு பகுதி” - வானதி சீனிவாசன்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Vanathi Srinivasan says Jallikattu is a part of Sanatana Dharma

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பா.ஜ.க சார்பில் தூய்மை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் கோனியம்மன் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அலங்காநல்லூர் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் கோவிலோடு தொடர்புடையது. இதனை எம்.பி. சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா?. கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு தான் காளையை அவிழ்த்து விடுவார்கள். அது தான் இந்த நாட்டின் மரபு, பண்பாடு எல்லாமே. அதாவது, திமுகவும், கம்யூனிஸ்டும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் உடைய அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தை சீரழித்து அதை அவமானப்படுத்துவது தான் வேலையாக வைத்திருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டில் முதல் காளை சாமியோட காளை தான் முதலில் வெளியே வரும். அப்படியென்றால், கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க நினைக்கிறார்களா?. ஜல்லிக்கட்டு என்பது இந்து கலாச்சாரத்தில் ஒரு கூறு. அதனால் தான் காளையை சாமியோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பொங்கல் என்பதே சூரிய கடவுளைப் பார்த்து கும்பிடுவது தான். வேறு மதத்தில் கற்பூரம், ஆரத்தி எதுவும் காட்டுகிறார்களா?. இந்து மதத்தில் தான் கற்பூரம் காட்டி திருநீறு பூசுகிறோம். இது முட்டாள்தனமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி. சனாதன தர்மம் மட்டும் தான் மனிதனை மட்டும் இங்கு இருக்கக்கூடிய மிருகத்தையும் சமமாக பார்க்க சொல்லிதரக்கூடிய ஒரு தர்மம்” என்று கூறினார்.

அப்போது அவரிடம், ‘அங்கே கோவில் வருவது எங்கள் பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த மசூதி கட்டப்பட்டதே கோவிலை இடித்து தான் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனால், இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் நியாமாக இருக்கும். தமிழக முதல்வர் நேரில் கூட அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதியளித்துள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மட்டுமல்ல அந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் நாங்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம். எப்படி, கிறிஸ்துவ கோவிலுக்கும், இஸ்லாமிய கோவிலுக்கும் சென்று அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்களோ, அது போல் இந்த கோவிலுக்கும் வந்து ராம பக்தர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும். 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்ததின் உடைய அடுத்தக் கட்டம். இந்த நாட்டில் வருடம் முழுவதும் தேர்தல் நடத்துகின்ற பொழுது, அந்த மாநிலங்களில் எந்தவிதமான வளர்ச்சி பணியையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளுகின்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரம் எல்லாம் இதற்கு மட்டுமே செலவாகிறது. அதனால், சீர்திருத்தை நோக்கி உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள். அதை விட்டு புறக்கணிப்பதோ அல்லது மறுப்பதோ சரியாக வராது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.