Skip to main content

நெல்லை உமாமகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ஏன்?

Published on 30/07/2019 | Edited on 30/07/2019
Issue



நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலையில், சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கொலையை கார்த்திகேயன் தனியாக செய்திருக்க முடியாது என்றும், ஒரு கும்பலாகத்தான் இந்த கொலையை செய்திருக்க முடியும் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இருப்பினும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு போலீசார் நகரவில்லை. 
 

 

இதற்கிடையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர், சீனியம்மாள் குடும்பத்திடம் பேரம் பேசியதாக ஒரு புகார் டிஜிபி திரிபாதிக்கு வந்திருக்கிறது. நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பென் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதால் மூன்று பேர் கொலையில் உரிய விசாரணை நடக்க வேண்டும் என்று, டிஜிபி திரிபாதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 


 

 

 



 

சார்ந்த செய்திகள்