Skip to main content

இரட்டை இலையா, உதயசூரியனா மாற்றி சொன்ன இளங்கோவன்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

தமிழகத்தில் மிகவும் கவனிக்க கூடிய ஸ்டார் தொகுதியில் ஒன்று தேனி  பாராளுமன்றம் இந்த தொகுதியில் மும்முனை போட்டியிருப்பதாக கருதப்படுகிறது .இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈ .வி .கே .எஸ் .இளங்கோவனும், அதிமுக சார்பில் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாரும் , அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வனும் போட்டி போடுகிறார்கள் . இளங்கோவனை ஆதரித்து அந்தக் கூட்டணியின் பல்வேறு கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
 

evks



இந்த நிலையில் பெரியகுளத்தில் அவருக்கு ஆதரவாக வைகோ பங்கேற்றார் . அந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய இளங்கோவன் தனக்கு கை சின்னத்திலும் ,  திமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்குமாறு கூறினார் .உடனே சுதாரித்துக் கொண்ட இளங்கோவன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ., மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த இரட்டை இலை காணாமல் போய்விட்டது என்றும் , பின்பு திமுக வேட்பாளர் சரவணகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் கூறினார் . சமீப காலமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் இப்படி மாற்றி மாற்றி பேசி வாக்கு கேட்பது வாடிக்கையாகிவிட்டது. 

சார்ந்த செய்திகள்