Skip to main content

“தமிழ்நாடு அரசு அறிவித்த பயணம் யாருக்கும் போட்டியல்ல...” - அமைச்சர் சேகர்பாபு

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

"The trip announced by the Tamil Nadu government is not a match for anyone" Minister Shekharbabu

 

தமிழக அரசு அறிவித்த காசி யாத்திரை காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியல்ல என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

 

தமிழக அரசு சார்பில் கடந்த 22 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு முதற்கட்டமாக 66 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் வந்தபோது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை வரவேற்றார். 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 27வது அறிவிப்பாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு செல்கின்ற புனித யாத்திரை பயணத்தை அறிவித்திருந்தோம். கடந்த 22 ஆம் தேதி 66 நபர்களுடன் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. பயணம் முடிந்து சென்னை திரும்பியவர்களை நானும் துறையின் ஆணையரும் வரவேற்று வழியனுப்பி வைத்தோம். இந்த பயணத்திற்காக செலவான 50 லட்சத்தை தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 

 

2022 - 2023 ஆம் ஆண்டுக்கான 200 நபர்களுக்கு காசி புனித யாத்திரை பயண திட்டத்தை அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக 66 பேர் சென்று வந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக அடுத்த மாதம் ஒன்றாம் தேதியும் அதேபோல் மார்ச் 8 ஆம் தேதியும் இந்த பயண திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. மூன்று பிரிவுகளாக பிரித்து காசிக்கு அழைத்து செல்கிறோம். உடன் மருத்துவ குழுவினரையும் அனுப்புகிறோம். 

 

60 வயதிற்கு மேற்பட்டோருக்கான இந்த முதற்கட்ட பயணத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள். இப்பயணம் யாருக்கும் இது போட்டி அல்ல. இதைப் பொறுத்தளவில் கடந்தாண்டு மானிய கோரிக்கையிலேயே நாங்கள் அறிவித்துவிட்டோம். அதன்பிறகுதான் இந்த காசி சங்கமம் எல்லாம் உருவானது. ஆகவே, போட்டி என்று எடுத்துக் கொண்டால் தமிழக அரசு அறிவித்த திட்டத்திற்கு தான் காசி தமிழ் சங்கம் போட்டி என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.