Skip to main content

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள்?– கோடிகளில் பட்ஜெட் போட்டுள்ள கட்சிகள்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என பெயர் பெற்றது. 1951 முதல் இப்போது வரை இந்த தொகுதியில் பலமுறை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த தொகுதியில் சீட் பெற கடுமையாக திமுக தரப்பில் முயற்சிக்கிறது.

 

t

 

திமுக கூட்டணி:

இந்த தொகுதியில் திமுகவே நிற்க முடிவு செய்துள்ளது. சீட் கேட்பாளர்கள் மனு செய்யலாம் என அறிவிப்பு செய்ததன் விளைவாக கடந்த முறை நின்று தோல்வியை சந்தித்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை நகராட்சி முன்னால் சேர்மன் ஸ்ரீதரன், திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மூவரும் பணம் கட்டிவிட்டு பெரும் முயற்சியில் உள்ளனர்.

 

k

 

கட்சி நிர்வாகிகள் சிலர், மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏவின் மகன் மருத்துவர் கம்பனுக்கு சீட் தந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்புவதால் அவருக்காக வேலுவிடம் பேசியுள்ளனர். அவரோ, ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்திலேயே, நான் என் மகனுக்கு கேட்கவில்லை எனக்கூறிவிட்டார். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தும் அவர் பெயரில் சிலர் மனு செய்துள்ளனர்.

 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த தொகுதி மீது ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை.

 

அதிமுக கூட்டணி:

அதிமுகவே நேரடியாக இந்த முறை போட்டியிட நினைக்கிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கொங்கு பகுதி ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் மூலமாக தனக்கு சீட் கேட்டு முதல்வர் எடப்பாடியை நெருக்கிவருகிறார். கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மூலமாக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தனக்கு தேவை எனக்கேட்டு வருகிறார். சிட்டிங் எம்.பி வனரோஜா, முன்னால் மா.செ. ராஜன் போன்றோரும் சீட் வாங்கிவிட முட்டி மோதுகின்றனர்.

 

a

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, அந்த கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படும் தேமுதிக போன்றவை ஆர்வம் கட்டவில்லை. அதனால் திமுக – அதிமுக நேரடி போட்டி என்பது இப்போது வரை உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள் இரண்டு கட்சி உறுப்பினர்களும்.

 

கோடிகளில் பட்ஜெட்:

அதிமுகவில் ஒரு தொகுதிக்கு 40 கோடி என தற்போது பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் தரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெ பாணியிலேயே, நிறுத்தப்படும் வேட்பாளருக்கு தலைமையே முழுவதும் செலவு செய்ய முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, வலிமையான, கட்சிக்கு விசுவாசமான வேட்பாளராகவும் தேடுகிறது. இதனால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் இடையே போட்டி அதிகமாகியுள்ளது. 

 

a

திமுகவில் ஒரு தொகுதிக்கு 30 கோடி என பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 15 கோடி வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் செலவு செய்ய வேண்டும், மீதி 15 கோடியை தலைமை தரும். திமுகவில் வேட்பாளராக உள்ள அண்ணாதுரை என்னிடம், 5 கோடி தான் உள்ளது, மீதியை கட்டி என்னை ஜெயிக்க வைங்க உங்களுக்கு விசுவாசமா இருப்பன் என வேலுவிடம்  கூறியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், என்னால் 10 முடியும் என்றுள்ளார். 

 

இதுதான் தற்போது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விசுவாசமா இருந்தால் போதுமா, கட்சிக்கு விசுவாசமா இருக்கற ஆளை தேர்வு செய்து வேட்பாளரா நிறுத்தலையா என கேள்வி எழுந்து திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.