Skip to main content

மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிந்தது எல்லாம்... சீமான் பேச்சு 

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாச்சேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 

eps-mks-seeman



கட்சிக்கு எவ்வளவு தருவார்கள், சீட்டுக்கு எவ்வளவு தருவார்கள் என்று பார்த்து தான் சில கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், கடைக்கு செல்லும் பெண்கள் மீண்டும் வீட்டிற்கு வருவார்களா? என்ற அச்சத்துடனே பெற்றோர்கள் உள்ளனர். பெண்கள் இரவில் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பும் நிலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளதா? 

 

நாட்டில் சந்தன மரம் வெட்டியவன் காட்டில் என்றால், வாங்கியவன் எங்கே? அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? நாட்டில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தை கைவிட வேண்டும். பெண்மையை காப்பது தான் உண்மையான ஆண்மை. இந்திய தலைவர்களின் பிள்ளைகள் யாராவது நாட்டை காக்க ராணுவத்தில் உள்ளார்களா?
 

தேர்தல் என்பது திருவிழா போன்று மாறிவிட்டது. இடைத்தேர்தல் என்றால் அனைத்து அமைச்சர்களும் வந்து ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்று தான் செயல்படுகின்றனர். இவர்கள் எப்படி மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், அடிப்படை தேவைகள் அறிந்து செயல்படுவார்கள். தேர்தலுக்கு தேர்தல் மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று தான் சிந்தித்து வருகின்றனர்.

 

நாட்டையும், வீட்டையும் பாதுகாப்பது தான் உண்மையான வீரம். குடிநீருக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படாததால் குடிநீருக்காக மூன்றாம் உலகப் போர் விரைவில் நடக்க போகிறது. தொழில் வளர்ச்சியை மட்டுமே முன்னெடுத்துச் சென்ற நாட்டின் நிலை, தற்போது என்ன ஆகிவிட்டது? தொழில் வளர்ச்சி மட்டுமே நாட்டை வளர்ச்சியடைய வைக்காது. 
 

ராமநாதபுரத்தில் தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ.50 என்றாலும், கொடுக்க அங்கே தண்ணீர் இல்லை. தற்சார்பு, பசுமை பொருளாதாரம் என்றால் என்ன? என்று மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கேபிள் டி.வி. கட்டணம் மட்டுமே. இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.