Skip to main content

“அம்பேத்கரை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்” - திருமாவளவன் எம்.பி

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Thirumavalavan condemns saffron Ambedkar

 

சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

 

இதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமா, "உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளா, பேராசிரியர்களா ,உயர்கல்வி நிறுவனங்களா  இப்படி  எந்தத் துறையாக இருந்தாலும் 99 விழுக்காடு பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். இதர பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களாக மாற்றப்பட்டவர்கள் அதில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்கள் . இப்படி சூத்திரர்கள் கல்வியிலும், அதிகாரத்திலும்,  நிலம் என அனைத்திலும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளை நடத்தியவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர். அதற்கான ஆய்வுகளையும் அதற்கான நூல்களையும் ஆய்ந்து எழுதியவர் தான் புரட்சியாளர் அம்பேத்கர் .இப்படி கற்று உணர்ந்த பிறகு தான் அவர் சொல்கிறார் இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும் ஆரியத்திற்கும் ஏற்பட்ட யுத்தமே இந்திய வரலாறு என்கிறார்.

 

கோட்பாட்டு யுத்தம் ஆரியம் என்றாலும், பார்ப்பனியம் என்றாலும், இந்துத்துவம் என்றாலும் சனாதனம் என்று தான் பொருள். சனாதனம் என்பதுதான் அவர்களே அவர்கள் கோட்பாட்டுக்கு வைத்திருக்கும் பெயர் சனாதன தர்மம். மனு எழுதிய சட்ட தொகுப்பு தான் மனுஸ்மிருதி. இந்த மனுஸ்மிருதி என்பது சனாதன அடிப்படையில் இந்து சமயத்தை முறைப்படுத்துவதற்கான பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே தொகுக்கப்பட்ட சட்ட நூல். ஆகவே இந்த சனாதனத்தை எதிர்த்துத் தான் அப்பொழுது பௌத்தம் யுத்தம் நடத்தியது. அந்தக் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. மௌரிய பேரரசு காலத்திலே இந்தியா முழுவதும் பௌத்தம் தான் கோலோச்சியது. இந்தியா முழுவதும் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே பௌத்தர்களாகத் தான் இருந்தார்கள் என்பது வரலாறு.

 

பார்ப்பனியத்திற்கு எதிரானவர்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டார்கள். இப்படி மனிதநேயமும், சமத்துவமும் இல்லாத இந்து மதத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என அறிவித்து பெளத்த மதம் மாறினார் அம்பேத்கர்.  அப்படி மாறிய போதும் அவர் தேர்வு செய்த இடம்  நாகபுரி அல்லது நாக்பூர். அவர் எதற்காக நாக்பூர் தேர்வு செய்தார் என்றால் அங்குதான் நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்கள் நார் என்றால் தமிழர்கள், திராவிடர்கள் என அம்பேத்கர் எடுத்துரைத்தார். 

 

அவர் பெளத்தம் மதம் மாறும் போது கூட 22 உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் அதில் முதல் உறுதிமொழியே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைக் கடவுளாக வணங்கமாட்டேன். அவர் அடுத்து எடுத்த உறுதிமொழி ராமன், கிருஷ்ணன் இறைவனின் அவதாரம் என நம்பமாட்டேன் என்கிறார். இப்படி 19 உறுதிமொழியாக மனிதநேயம் சமத்துவம் அற்ற முட்டாள்தனமான இந்து மதத்தை விட்டொழித்து  பெளத்தம் ஏற்கிறேன் என்றார். இப்படிப்பட்ட மாமனிதரை, புரட்சியாளரை  சிலர் அற்ப ஆதாயத்திற்காக புரட்சியாளர் படத்திற்கு  பட்டை இட்டு, குங்குமம் வைத்து இழிவுபடுத்துவதை இனியும் விடுதலைச் சிறுத்தைகள் பொறுத்துக்கொள்ளமாட்டோம்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.