Skip to main content

''திரைப்படத்தை எதிர்த்து, நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள்''-சீமான் ஆவேசம்

Published on 21/11/2021 | Edited on 21/11/2021

 

 "They opposed the film and closed all the problems in the country," Seaman said

 

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் படத்திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,

 

''கடந்த 12 நாட்களாக ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்து நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள். அணுக்கழிவை இடிந்தகரையிலேயே புதைக்கலாம் என்று ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது. இதை ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா? என்றால் பதில் இல்லை. நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தபோது நீட்டி முழக்கி அழுதவர்கள் இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் நீட் தேர்வால் ஆறு குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள். இதற்குப் பதில் என்ன? ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றீர்களே அதற்கு என்ன பதில்? பள்ளி, கல்லூரிகளுக்குப் பிள்ளைகள் செல்ல முடியவில்லை. ஆசிரியர்களே பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவமானம் தாங்காமல் பிஞ்சுகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எவரும் பேசவே இல்லை. வன பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் வந்தால் காடுகளை முழுக்க தனியார் மையப்படுத்தி விடுவார்கள். அந்த ஆபத்து தெரிந்து நாம் போராடுகிறோம். அதைப் பற்றி பேச்சு கிடையாது.

 

மீன்வள சட்டம். கடலில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் கடலுக்கு போகும் போது இரண்டு லட்சம் ரூபாய் கட்டிவிட்டுதான் போகவேண்டும். இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் மீனவன் எதற்கு மீன்பிடிக்க போகிறான். அதை வைத்தே வாழ்ந்திருக்க மாட்டானா? 12 நாட்டிகல்லுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும். அதுவும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மீன்பிடிக்க கூடாது. நான் பிடித்த மீனின் மதிப்பு பத்தாயிரம் ரூபாயா, ஏழாயிரம் ரூபாயா என்பது கரைக்கு வந்தால் தானே தெரியும். இது என் கடல், என் நிலம், என் உரிமை. 12 நாட்டிக்கல் மைலுக்கு கொஞ்சம் தள்ளி சென்று விட்டால் படகை பறித்துக் கொள்ளலாம், வாழ்நாள் முழுக்க மீன் பிடிக்க தடை என இந்த சட்டம் சொல்கிறது. இதைப்பற்றி ஒருவர் பேசியது உண்டா? சத்தமில்லாமல் திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலை போடுகிறார்கள். நாங்கள் கேட்கவே இல்லையே... நாங்கள் கேட்டது கச்சத்தீவை மீட்க சொல்லி, நீட் வேண்டாம் என்கின்றோம், ஜிஎஸ்டி வேண்டாம் என்கிறோம். நாங்கள் எதிர்த்து போராடியதை எதையுமே கேட்பதில்லை, நாங்கள் போராடாததையெல்லாம் திணிப்பது. ஜெய்பீம் சிறந்த படம். மக்களினுடைய வலியை தூக்கி ஒரு தலைமுறைக்கு உணர்த்துகிற படம், இனிமேல் இதுபோல் ஒன்று நடந்து விடக்கூடாது என உணர்த்துகிற படம்.

 

காடுவெட்டி குருவை ஆதரித்துவிட்டார் சீமான் ஜாதி சாக்கடை, சாதி வெறியர் என்று எழுதி விமர்சிக்கிறார்கள். இதை எழுதுவது யாருடைய ஆட்கள் என தெரியுமா? காடுவெட்டி குருவின் நினைவிடத்தில் விழுந்து கும்பிட்டு மாலை வைத்து வாக்கு கேட்டவர்கள்தான் என்னை சாதி வெறியர்கள் என்கிறார்கள். அவரது மகன் கனலை கூட்டிக்கொண்டு அறிவாலயத்தில் சந்தித்து எங்களை ஆதரியுங்கள் என்று மாலையைப் போட்டு வரவேற்ற மகத்தான பெருமக்கள் என்னை சாதி வெறியன் என்கிறார்கள். அவரது மருமகன் மனோஜை கூப்பிட்டு, மகளைக் கூட்டிக்கொண்டு சென்று அறிவாலயத்தில் சந்தித்து உதயநிதி, காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவிக்கிறார். அப்போது வராதா சாதிவெறி. டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்கும்பொழுது சட்டசபையில் பேசுகிறார், 'பாலுத்தேவரின் மகன் ராஜா தேவர்' என பேசுகிறார். பக்கத்தில்தான் முதல்வர் இருக்கிறார். அதையெல்லாம் பார்த்த பெருந்தகைகள். அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் திருச்சியில் நடந்த ரெட்டியார் மாநாட்டில் பேசிய பேச்சுக்கள் இருக்கின்றன. அவை எல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு உறுத்தவில்லை. அவையெல்லாம் ஏன் பிரச்சனையாகவில்லை. அதையெல்லாம் ஏன் பேச மாட்டுகிறீர்கள். உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? நாங்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே சாதி பார்த்து ஓட்டு போட்டால் அந்த ஓட்டு எனக்கு தீட்டு என பேசிய ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே'' என்றார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.