Skip to main content

''நினைவுச்சின்னம் வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால்...'' - கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

'There is no objection to the memorial... But' - K. Balakrishnan interview

 

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''பாஜகவை எதிர்க்கிற போராட்டத்தில் நாங்கள் திமுகவோடு இணைந்து போராடுவோம். மக்கள் நலன் சார்ந்து இருக்கக்கூடிய பிரச்சனையில் மக்களுக்கு சார்பாக திமுக அரசிடம் கோரிக்கைகளை வைத்து வாதாடுவோம், போராடுவோம். இரண்டையும் ஏககாலத்தில் நாங்கள் செய்வோம்.

 

கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் தமிழகத்தில் ஆளுமையாக இருந்தவர். பல்வேறு தளங்களில் நல்ல சாதனைகள் படைத்திருக்கிறார். அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் வைப்பது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிச்சயமாக வைக்கலாம். ஆனால், அப்படி ஒரு நினைவுச்சின்னம் வைக்கின்ற பொழுது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படும் இடங்களில் வைக்க வேண்டாம். பெரிய ஆளுமையாக இருக்கக்கூடிய கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதே காலகாலத்திற்கும் சர்ச்சைக்குள்ளாகி இருப்பதைப் போல் ஏன்  வைக்க வேண்டும்.

 

சர்ச்சை இல்லாத, எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஒற்றைக் கருத்தை உருவாக்கி வைக்க வேண்டும். நாங்கள் முறைப்படி எல்லா அனுமதியும் பெற்ற பிறகுதான் இதை துவங்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்படிப்பட்ட நினைவுச் சின்னத்தை வைப்பதில் தப்பில்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. நிதி நெருக்கடி இருக்கும் பொழுது கூடுதலாக பணம் இதற்காக செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வி எங்களுக்கும் இருக்கிறது. ஆனால், எப்படிப் பார்த்தாலும் நினைவுச் சின்னம் வைப்பதற்கு செலவு ஆகத்தானே செய்யும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.