Skip to main content

“இந்தியாவில் சாதி மத பாகுபாடுகள் இல்லை” - பிரதமர் மோடி

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

"There is no caste and religion discrimination in India" - PM Modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.

 

அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

 

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். அவர் கூறுகையில், “அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரிய மரியாதை. இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல் முறை. 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். இந்திய அமெரிக்க மரபணுவில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் மக்களை ஒருங்கிணைக்கிறது. உக்ரைன் ரத்யா போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

 

தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரி. அதை ஆதரிக்கும் ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும். 9/11 நடந்து 20 வருடங்கள் கடந்த பின்னும், மும்பையில் 26/11 தாக்குதல் நடந்து 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் தீவிரவாதம் இன்னும் குறையவில்லை. அந்த கருத்தியல்கள் புதிய அடையாளங்களை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அவர்களின் குறிக்கோள் ஒன்றுதான். தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி” என்றார். பிரதமர் மோடியின் பேச்சை பாராட்டி உறுப்பினர்கள் பலமுறை எழுந்து நின்று கை தட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் "இந்தியா தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என நீண்டகாலமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது; ஆனால், அங்குள்ள மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், விமர்சனம் செய்பவர்களை அடக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?" என அமெரிக்க பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகம் எங்கள் டி.என்.ஏ.-வில் இருக்கிறது; ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது; ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை எங்கள் அரசு கொண்டிருக்கிறது; அதன் அடிப்படையில் எங்கள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்படி நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களில் சாதி, மதம், வயது அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை" என தெரிவித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் 2014 ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பதவியேற்ற பின் அவரது 2 ஆவது செய்தியாளர் சந்திப்பாகும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க இளைஞர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Chennai police registered a case against the American youth

 

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் அலெக்ஸ் (வயது 22) என்பவர் மதுபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், காவலர்கள், வாகன ஓட்டிகளை எனப் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காவலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸை கைது செய்து அவர் மீது 6 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் முதல் முறையாக மது அருந்தியதால் ஏற்பட்ட போதையால் சாலையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டிப்ளமோ படித்துள்ள இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோலர் நிறுவனத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவரைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

 

 

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.