Skip to main content

தமிழ்நாடு பாஜகவில் புகைச்சல்! ஓரங்கட்டப்படுகிறாரா முக்கியத்தலைவர்? 

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

TamilNadu BJP Leader karu Nagarajan issue
                                                        கோப்புப் படம் 

 

தமிழக பாஜகவில் 4 பொதுச் செயலாளர்கள், 5 துணைத் தலைவர்கள், 10 செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பொதுச் செயலாளர்களை மாற்றியமைப்பதில் வேகம் காட்டுகிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதில் கரு. நாகராஜனை மாற்றியாக வேண்டும் என்கிற குரல்கள் கமலாலயத்தில் எதிரொலிக்கின்றன.

 

பாஜகவின் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எம்.என். ராஜா, சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் கரு. நாகராஜன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அதிருப்திகள் பற்றி விசாரித்தபோது, “தமிழக பாஜகவில் கரு. நாகராஜன், கே.டி. ராகவன், கோவை செல்வக்குமார், மதுரை சீனிவாசன் என 4 பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இதில், தன் மீதான வீடியோ குற்றச்சாட்டுகளால் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார் ராகவன்.

 

பாஜகவின் வளர்ச்சிக்காக தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து 4 பொதுச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொடுத்தது கட்சித் தலைமை. இதில் சென்னை மண்டலத்துக்குப் பொறுப்பாளர் கரு. நாகராஜன். பொறுப்பு கொடுக்கப்பட்டும் கட்சியின் வளர்ச்சிக்காக எதையும் அவர் செய்யவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன நடிகை குஷ்பு, கரு. நாகராஜனுக்கு எதிராக புகார் வாசித்திருக்கிறார். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, களநிலவரத்தையறிந்து அதனைப் புறக்கணிக்க மூத்த தலைவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், பாஜகவை போட்டியிட வலியுறுத்தி, வேட்பாளராக களமிறங்கினார் கரு. நாகராஜன். ஆனால், நோட்டாவைக் கூட அவரால் தாண்ட முடியவில்லை.

 

அதேபோல நடிகர் சரத்குமாரின் ச.ம.க. கட்சியில் இவர் இருந்தபோது திருமங்கலம் இடைத்தேர்தலில் சரத்குமாரிடம் மல்லுக்கட்டி ச.ம.க.வை போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில் ச.ம.க.வுக்கு கிடைத்த வாக்குகள் 850. அதிலிருந்தே சரத்தின் அரசியல் செல்வாக்கும் சரிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தி அன்று சென்னையிலுள்ள தேவர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தார் சென்னை மண்டலப் பொறுப்பாளரான கரு. நாகராஜன். ஊர்வலத்தில் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர்.

 

இதனால், மூத்த தலைவர்களும் சென்னை மண்டல நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தவிர, அவரின் தேர்தல் வியூகமும் சரியில்லை. வேலையும் முறையாக செய்யாத இவரை வைத்துக்கொண்டு மாநகராட்சித் தேர்தலை எப்படி பாஜக சந்திக்க முடியும்? அதனால்தான் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது'' என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.