Skip to main content

பாஜக மூத்த தலைவர்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கும் சூர்யா சிவா

Published on 06/12/2022 | Edited on 25/12/2022

 

Surya siva's resign letter from bjp

 

தமிழ்நாடு பாஜக ஓ.பி.சி. அணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சூர்யா சிவா, தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருவரையும் விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதற்கு ஆஜரான இருவரும் விளக்கம் கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நாங்கள் இருவரும் அக்கா தம்பி போன்றோர்’ என முடித்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா பா.ஜ.க.விலிருந்து 6 மாதத்திற்கு அண்ணாமலையால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், பாஜக மூத்த நிர்வாகியான கேசவ விநாயகம் மீது குற்றச்சாட்டு வைத்து கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்குக் கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.  

 

இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர், “தமிழக பாஜகவுக்கு நீங்கள் ஒரு பொன்னான பரிசு.  2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிச்சயமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் இருப்பது ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் அடுத்த திட்டமிடப்பட்ட பிரதமராகக் கூட நீங்கள் ஒரு திறமையான வேட்பாளர். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியைக் கண்டு ரசிக்கிறேன்.

 

 

எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் ஆகிய இருவரும் சந்தோஷமாய் இருங்கள். இனியாவது கட்சிக்காரர்களை நம்புங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் என் தலைவரால் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். தயவு செய்து எமது மக்கள் தலைவருக்கு இடம் கொடுங்கள். காயத்ரி மற்றும் டெய்சி ஆகியோருடன் உங்கள் விளையாட்டுகளை விளையாடாதீர்கள். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் இருவரும் எனது தலைவர் வழியில் குறுக்கிட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.