Skip to main content

“எம்.ஜி.ஆர்-க்கு ஸ்டாலின் மரியாதை செய்கிறார்.. இ.பி.எஸ். அவமானப்படுத்துகிறார்..” - கொதிக்கும் புகழேந்தி

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Stalin pays homage to MGR. Edappadi palanisamy Insults. ”- Pukahendi

 

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் முன்னாள் தமிழக முதல்வர் பழனிச்சாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 27 அமாவாசைக்குள் மாறும் எனக் கூறுகிறார். சினிமா படம் தான் நினைவுக்கு வருகிறது. அமாவாசை என்றால் பழனிசாமிக்குத் தான் மிகவும் பொருந்தும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி எதிர்த்து நின்றபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால், அதனை விரும்பவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் எனக்கூறித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார். இதனை மறந்து மக்களை திசைதிருப்ப, அமாவாசை கதைபேசும் அமாவாசை பழனிசாமிக்கு கண்டனம்.

 

மேற்கு வங்கம்போல் சட்டசபையை முடக்குவோம் எனக் கூறுவது பழனிசாமி சர்வாதிகார பேச்சைக் காட்டுகிறது. தமிழக ஆளுநர் என்ன தலையாட்டி பொம்மையா? இவருக்கு சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எப்போது கூறினார் புரியவில்லை. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சொல்லி வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பது சாத்தியமில்லை, ஒரே ஜெயில் என்பது தான் சாத்தியமான ஒன்று.

 

தேர்தல் பரப்புரையில் இதுவரை ஒ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன சேவை செய்ய போகிறோம் எனச் சொன்னது உண்டா. 2021 உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆயிற்று.

 

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி இல்லை. தேசிய முற்போக்கு கூட்டணி தொடர்கிறது. தேர்தல்களில் கூட்டணி உண்டு என பாஜக தலைவர் அண்ணாமலையும், பழனிசாமியும் கூறுவது அ.தி.மு.க. அடிமை சாசனத்தை உறுதி செய்கிறது. 

 

பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக, கோடிக் கணக்கில் பல வகைகளில் செலவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடும் சாதாரண அடிமட்ட தொண்டருக்குச் செலவு செய்யாதது ஏன்? தி.மு.க. அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும், மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஒரே வெறுப்பு தான் பழனிசாமி உள்ளிட்ட ஊழல்வாதிகளை இன்னும் கைது செய்யவில்லை என்கிற அதிருப்திதான் உள்ளது.

 

அனுதினமும் நாங்கள் போற்றி புகழ்பாடி வணங்கும் எம்.ஜி.ஆர் உருவத்தில் தெரிந்த ஒருவர், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி வரவேற்பது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் செயல் அல்லவா. அதே நேரத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்துள்ளார். மறைந்த நாவலருக்குச் சிலை கண்டுள்ளார். அம்மா கேண்டீன் தொடர உத்தரவிட்டுள்ளார். நீட் விஷயத்தில் அம்மாவை காட்டி எதிர்ப்பை பாராட்டிப் பேசி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வருகிறார்” என்று பேசினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.