Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுகவுக்கே பலம்! திணறுகிறது அதிமுக!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

Srivilliputhur: DMK is the strength admk is in tough
ரவிகண்ணன்

 

தமிழக அரசுக்கு முத்திரைச் சின்னம் தந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி வார்டுகளைப் பொறுத்தமட்டிலும் திமுக ஆதரவு வாக்குகளே அதிகம். இத்தனைக்கும் சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் 7 தடவை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தாமரைக்கனி காலத்திலும்கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் அதிமுகவாக இருந்தாலும், வார்டுகளில் அதிகமாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் ஆதரவில் வைஸ்-சேர்மன் பொறுப்புக்கு வருவது திமுகவாக இருந்தது. 

 

ஆளும்கட்சி ஓட்டுக்கு ரூ.500 தந்து, ஒருவேளை அதிமுகவும் அதே ரீதியில் வாக்காளர்களைக் கவனித்து வெற்றிபெற்றாலும், அதிமுக கவுன்சிலர்கள் விலைபோகும் வாய்ப்பு உள்ளது.

 

அதிமுக சேர்மன் வேட்பாளர் எனச் சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் போட்டியிடும் 32-வது வார்டில் எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுரேஷ், அவருக்கு ‘டஃப்’ கொடுப்பவராக இருக்கிறார். 5-வது வார்டில் போட்டியிடும் திமுக சேர்மன் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரவிகண்ணன், அதிமுக வேட்பாளரான ஆணழகனை (இன்பத்தமிழனின் தம்பி)  வலுவாகத் திணறடிக்கிறார். முன்னாள் திமுக எம்.எல்.ஏ. தங்கத்தின் மகன் என்பதும், செழிப்பான பின்னணி உள்ள பயில்வான் கிருஷ்ணசாமி தேவரின் பேரன் என்பதும் ரவிகண்ணனின் பலமாக உள்ளது. பயில்வான் கிருஷ்ணசாமி தேவர் ‘எத்தனை கோடி பணம் வேண்டும்? நான் தருகிறேன். மகள் வயிற்றுப் பேரன் ரவிகண்ணன் சேர்மன் சீட்டில் உட்காரவேண்டும்.’ என்று ஆர்வம் காட்டி வருவதாக உற்சாகத்துடன் சொல்கிறார்கள், உடன்பிறப்புகள்.   

 

Srivilliputhur: DMK is the strength admk is in tough
இன்பத்தமிழன்

 

அன்று தாமரைக்கனியிடம் எதிரரசியல் செய்த கே.கே.எஸ்.எஸ்.ஆர், இன்றுவரையிலும் அக்குடும்பத்தினருக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார் என்பதை சம்பந்தப்பட்டவர்களே கூறிவரும் நிலையில், ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இன்பத்தமிழனை தோற்கடித்தே ஆகவேண்டும்.’ என ஸ்கெட்ச் போட்டுத் தந்துவிட்டாராம். 

 

சில வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றாலும், கவுன்சிலர் எண்ணிக்கையிலும், சேர்மன் நாற்காலியில் அமர்வதிலும், திமுகவின்  ‘உயரம்’ கண்முன்னே தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.

Next Story

மாவட்ட கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு! 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Case filed on ADMK Srivelliputur MLA Manraj
எம்.எல்.ஏ. மான்ராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதே தொகுதிக்குட்பட்ட லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர், விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்டத்தின் ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார். 

கணேசன், நேற்று வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதிக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். 

Case filed on ADMK Srivelliputur MLA Manraj
கணேசன்

கடந்த திங்கட்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. மான்ராஜ், ‘டிச. 28ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.எல்.ஏ. மான்ராஜ், அவரது மனைவி வசந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். 

கணேசன் கொடுத்த புகாரை பெற்ற வன்னியம்பட்டி போலீஸார், எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பரபரக்கச் செய்துள்ளது. அந்த ஆடியோவில், “செல்வம், உன் வீட்ல ஒருத்தன் வந்திருக்கான் பாத்தியா; உன் வீடு புகுந்து.. உன் வீட்டுக்குள்ளேயே கொலை நடந்திடும். நெட்ல இருக்கிறதலாம் எடுத்து குரூப்புல போடுவதற்கு இவன் யாரு? நான் பேசின ஆடியோவை எடுத்து எல்லா ஏ.டி.எம்.கே. குரூப்புலையும் போட்டிருக்கான். நான் ஆள் அனுப்புறேன்; உன் வீட்ல கொலை நடக்கலானா.. அவன இன்னிக்கு சோலிய முடிக்கல.. இன்னிக்கு உன் வீட்ல கொலை நடக்கும்” என கொலை மிரட்டலும், மிகவும் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது, எம்.எல்.ஏ. மான்ராஜ், கணேசனை மிரட்டிய ஆடியோ என சொல்லப்படுகிறது.