Skip to main content

தமிழக ராஜ்யசபா இடங்களுக்கு  தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும்! - தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.. 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

Separate elections should be held for Tamil Nadu Rajya Sabha seats! - DMK petition in the Election Commission ..

 

தமிழகத்தில் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த முகமது ஜான், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மரணமடைந்தார். அதேபோல ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதால் அவர்கள் இருவரும் தங்களின் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர்.


இதனால் தற்போது தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள இந்த இடங்களுக்கு 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்திட வேண்டும்.  ஆனால், அதற்கான அறிகுறிகள்  டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காணப்படவில்லை. ஆனால், மூன்று இடங்களுக்கான தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், தேர்தல் ஆணையம் சென்று, தலைமைத்தேர்தல் ஆணையர் சுசில்சந்திரா மற்றும் ஆணையர்கள் ராஜிவ்குமார், அனுப்சந்திரபாண்டே ஆகியோரை சந்தித்து திமுக சார்பில் ஒரு மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.


அந்த மனுவில், “ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே அந்த இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும். அந்த வகையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

 

Separate elections should be held for Tamil Nadu Rajya Sabha seats! - DMK petition in the Election Commission ..

 

தற்காலிகமாக ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்வது தமிழக மக்களின் உரிமைகளை தேர்தல் ஆணையம் புறக்கணிப்பதாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தலை உடனடியாக தேர்தலை நடத்தி தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.


 
மேலும், பாஜகவை சேர்ந்த அமித்சா, ஸ்மிருதிராணி ஆகியோர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் உருவான தற்காலிக ராஜ்யசபா காலியிடங்களுக்கு உடனடி தேர்தலை நடத்தியதையும் திமுக எம்.பி.க்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.