Skip to main content

“அதிமுகவின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது” - சீமான்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Seeman says The work of AIADMK is highly commendable

 

கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு 65அடி உயர தீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

 

அதில் அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கிவிட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன். அதனால், தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் நான் போட்டியிடுவேன். என்னுடைய கனவு, இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கிடையாது. என்னுடைய தம்பி, தங்கைகளை நான் அனுப்புவேன். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியோ அல்லது பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியோ ஆகியோர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். 

 

இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என்று வரும் பொழுது சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை, காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பார்கள். அதே போல், கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக இருக்கிறது. மேலும், டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸை எதிர்க்கிறார். ஆனால், இந்தியா என்ற கூட்டணியில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இது போன்ற கூட்டணியால், மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவை எடுப்பது எப்படி சரியாக இருக்கும்?. இதனால், இந்த கூட்டணி வேடிக்கையாகத் தான் இருக்கிறது. 

 

பேரறிஞர் அண்ணாவை பற்றி பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு தி.மு.கவில் இருந்து ஆர்.எஸ்.பாரதி மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து முதல் அமைச்சரின் கருத்து என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அண்ணாவின் புகைப்படத்தை கொடியில் வைத்திருக்கும் அதிமுக அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதிமுகவின் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது” என்று கூறினார். 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலா... நீங்க சொல்லித்தான் தெரியும்” - இ.பி.எஸ்.

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Edappadi palanisamay addressed press in salem

 

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகள், தலைமைச் செயலகம், துறைமுகம் எனச் சென்னையின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் இருக்கும் இடத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியமா. கார் பந்தயம் நடத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் மைதானம் இருக்கிறது; அங்கு நடத்தலாம். இந்த கார் பந்தயம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது வெறும் விளம்பர அரசு. இந்த கார் பந்தயத்தால் ஏழை மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகக் கூறி அமலாக்கத்துறை அரசு மருத்துவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததா இல்லையா என்பது குறித்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். எங்கே தவறு நடந்தாலும், அது தவறுதான். எனவே அதில் சட்டம் அதன் கடமையை செய்வதில் எந்த தவறுமில்லை” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து ‘ஆளுநர் விவகாரத்தில் முதல்வரை அழைத்து பேசவேண்டும் என உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளதே’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், “அதுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டதே. பிறகு நாம் என்ன சொல்றது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்