Skip to main content

'ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாருங்க...'-செல்வப்பெருந்தகை பேட்டி  

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
'See after June 4, the BJP tent will be empty' - Selvaperunthakai interview

ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாஜக கூடாரமே காலியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் விடியோவை நேற்று (21.05.2024) பகிர்ந்திருந்தார்.அதே சமயம் இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ‘அண்ணனுக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் யாரையும் அதிமுகவினர் புகழ்ந்து பேசும் வழக்கம் கிடையாது. அப்படி இருக்க வழக்கத்திற்கு மாறாக செல்லூர் ராஜு செயல்பட்டிருப்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அதிமுகவின் தலைமையின் மீது ஏதேனும் அதிருப்தி உருவாகியுள்ளதா அந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக செல்லூர் ராஜு இப்படி பதிவிட்டுள்ளாரா? என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை வைத்திருந்தனர்.

அதோடு திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பிரபல தலைவரை செல்லூர் ராஜு புகழ்ந்து பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அதிமுக நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''செல்லூர் ராஜு உண்மையை போட்டுள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு கூட அவர் பேட்டி கொடுத்தார். காலையில் பார்த்தேன். என் மனதில் என்ன பட்டதோ அதை போட்டு இருக்கிறேன். அவர் எளிமையான தலைவர் என்னை நெகிழ வைத்திருக்கிறது என்று அவர் சொல்லியுள்ளார். அவர் மட்டுமல்ல பாஜகவில் உள்ள தலைவர்களும் ராகுல் காந்தியை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியலுக்காக அங்கே இருக்கிறார்கள். வருகின்ற நான்காம் தேதிக்கு பிறகு பாஜக கூடாரமே காலியாகும். அவர்களுடைய வெறுப்பு அரசியலை எப்படி திட்டமிட்டு செய்தார்கள் என்பதை அவர்களே பேச போகிறார்கள். ராகுல் காந்தி எல்லாரையும் கவர்ந்திருக்கிறார் என்பது செல்லூர் ராஜு மூலம் தெரிகிறது. செல்லூர் ராஜு எப்போதும் உண்மையாகவே பேசுவார். சட்டமன்றத்தில் கூட என்ன தோணுதோ அதை பேசுவார். ரொம்ப மகிழ்ச்சியாக பேசுவார். சில சமயத்தில் கலகலப்பாக பேசுவார். அப்படிப்பட்ட நல்ல மனிதர். அவர் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு; காரசார விவாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒத்திவைப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
mr vijayabhaskar bail plea adjourned again for the third time
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 3-வது முறையாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்தப் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். 

mr vijayabhaskar bail plea adjourned again for the third time
பிரகாஷ்

இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று 21-ஆம் தேதி வந்த நிலையில், கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வருகின்ற 25ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைத்துள்ளார்.

Next Story

‘கள்ளச்சாராய உயிரிழப்பு’ - அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
High Court order to kallakurichi incident report! 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (20.06.2024) வழக்கு தொடரப்பட்டது. அதிமுக சட்டத்துறை செயலாளரும்,  ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இன்பதுரை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

High Court order to kallakurichi incident report! 

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிடுகையில், “காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கள்ளச்சாராய விற்பனையத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?. கள்ளச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் நீதிபதி குமரேஷ் பாபு, “கள்ளச் சாராய மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை  ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.