publive-image

Advertisment

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 89 ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஒரு கட்சிமதவாதக் கட்சியாகசெயல்படுவதையும்அனுமதிக்க முடியாது. கற்பனையாகக் கூறப்படும் வரலாற்றைக் கண்டு ஏமாந்துவிடக்கூடாது.

நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல.உண்மையான அறிவியல்ஆய்வின் அடிப்படையிலானவரலாற்று உணர்வைமக்களிடம் கொண்டு செல்வது தமிழக அரசின் கடமை.

Advertisment

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு பழந்தமிழ் நிலப்பரப்பில் இருந்து துவங்கினால்தான் முறையாக இருக்கும். தமிழினத்தின் பெருமையைமீட்கும் அரசாக திமுக செயல்படுகிறது” எனக் கூறினார்.