Skip to main content

தமிழகத்தை மோடியிடம் இருந்து காப்பாற்ற, திமுக கூட்டணி வெற்றிபெறவேண்டும்; வைகோ

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபறக்கிறது. அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்குவேட்டை நடத்திவருகின்றனர்.

 

vaiko

 

அந்தவகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான  ராமலிங்கத்திற்கு கும்பகோணத்தில் வாக்கு கேட்டு பேசினார். அதனை தொடர்ந்து நாகை  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  செல்வராஜுக்கும்,  திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கலைவாணனுக்கும் ஓட்டு கேட்டு திருவாரூரில் பேசினார்.
 

"திராவிடர்களின் திருநகரங்கள் மூன்று, வெண்தாடி வேந்தர் பெரியார் பிறந்த ஈரோடு, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இந்த திருவாரூர் ஆகிய மூன்றும். கடந்த சட்டமன்றத்தேர்தலில்  தமிழகத்தையே திகைக்கவைக்க கூடிய அளவில் அதிகவாக்கு வித்தியாசத்தில் கலைஞரை வெற்றி பெற வைத்தது இந்த திருவாரூர் மக்கள். ஆனால், கலைஞர் தற்போது நம்மோடு இல்லை அண்ணாவோடு அவருக்குப் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது சொந்த மண்ணில் இன்று நாம் பிரச்சாரம் செய்கிறோம். அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இருக்குமானால் திருவாரூரில் உதய சூரியனை மீண்டும் உதிக்கச் செய்வதுதான்.
 

கலைஞரின் மாநில சுயாட்சியை நிலைநாட்டிட, மத்தியில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட காங்கிரஸ் பேரியக்கம் மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திட, மீண்டும் திமுக வெற்றி பெற வேண்டும். ஊருக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டம் இன்று பாலைவனமாக மாற்றுவதற்கான திட்டத்தை மோடி அரசு நேரடியாகவே எடுத்துள்ளது. ரூ. 5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதோடு, அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்கிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீர்கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் அந்த திட்டம்.  தண்ணீர் இல்லாமல் போனால் இந்த நிலங்கள் பாழ்பட்டு பாலைவனமாக போகும். இந்த நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்க அதானிகளையும், அம்பானிகளையும், வேதாந்தா நிறுவனங்களையும், அனுப்புவார்கள், அவர்கள் வாங்குவது விளைவிப்பதற்காக அல்ல கீழே இருக்கும் இயற்கை வளங்களை சுரண்டவதற்காக.
 

இந்தியாவில் 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால்ம, மோடி ஆட்சிக்கு வரும்போது இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என உலக மகா பொய் சொல்லிவிட்டு ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டார். ஆனால், 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை மோடி அரசு. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றனர், அதற்காக அக்கவுண்ட் ஓபன் செய்ய சென்றால் 5,100 ரூபாய் இல்லையென்றால் அவதாரம் போட வைத்தனர், இப்படியே 10,320 கோடியை வசூலித்தனர். சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஜி.எஸ்.டி. மூலம் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகளில் உள்ள பெரு குடும்பங்களையும், பெருவணிகர்களையும் இந்தியாவிற்கு வருவதற்கு வாசலை திறந்து வைத்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் ஏஜென்ட் ஆகவே இருக்கிறது.
 

 அதேவேளையில் விஜய் மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். கர்லின் கம்பெனி ஓனர் ரூ. 9 ஆயிரத்து 500 கோடியை ஆந்திர வங்கியில் ஏமாற்றிவிட்டு தப்பி விட்டார். இப்படி 23 பேர் ரூ. 90 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ரூ. 5 லட்சம் கோடி கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. இது அவர்களின் லட்சனம் என்றால், மாநில அரசோ மத்திய அரசுக்கு காலில் விழும் அரசாக இருக்கிறது. மத ஒற்றுமை உள்ள தமிழகத்தில் மத வெறியை தூண்ட  மோடி அரசு துடிக்கிறது.
 

1948 ஜனவரி 30-ஆம் தேதியை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. இந்து வெறியர்கள் காந்தியை சுட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். அந்த நிமிடத்தில் திராவிட தலைவர்களான பெரியார் முதல் அண்ணா வரை பரிதாபப் பட்டார்கள், கோபப்பட்டார்கள், அதே காந்தியை 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2 மாதத்திற்கு முன்பு நரேந்திர மோடியின் ஆதரவில் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் உ.பி.யில் காந்தி பொம்மையை வெற்று துப்பாக்கியால் சுட்டு ரத்தம் சொட்ட சொட்ட வழிவது போல் வெறியை காட்டுகின்றனர். உலகம் முழுவதும் கோட்சேவின் சிலை வைப்போம் என்கிறார்கள்.
 

ஆனால் எங்களை மத துரோகிகள் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பேசுகிறார்கள், நாங்கள் ஒற்றுமையை காப்பவர்கள், அதற்காக கலைஞரும் நாங்களும் செய்த சாதனைகள் ஏராளம். ஓடாத தேரை ஓட வைத்தவர் கலைஞர். அந்த வகையில் நாங்கள் எம்மதத்தையும் மதிப்பவர்கள்.
 

 கஜா புயல் பாதித்தபோது மோடி வரவில்லை, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது ஒரு நாட்டில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தமிழகத்தை வேரறுக்க மோடி துடிக்கிறார், அந்த நிலை மாற வேண்டுமானால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற வேண்டும்" என்று தனக்கே உரிய பாணியில் வாக்கு சேகரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.