Skip to main content

“ஆர்.எஸ்.எஸ் ரவி நன்றாக செயல்படுகிறார்” - துரை வைகோ

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

'RSS Governor Ravi is doing well' - Durai Vaiko

 

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதோடு நிறைவடைந்தது.

 

சேது சமுத்திரத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''சேது சமுத்திரத் திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் தர வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தால் வருமானம் இருக்காது. மீனவர்களுக்கும் இந்தத் திட்டத்தால் பயனில்லை. மத்திய அரசுடன் இணைந்து புதிதாக சேது சமுத்திரத் திட்டத்தை உருவாக்கினால் பாஜக ஆதரிக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

 

mdmk

 

இந்நிலையில், இன்று மதிமுகவின் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது சேது சமுத்திரத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''வைகோவை பொறுத்தவரை இது நீண்டகாலத் திட்டம். கிட்டத்தட்ட ஆங்கிலேயர் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இதைக் கொண்டு வர நினைத்தார்கள். அதன் பிறகு நேரு காலத்தில் காங்கிரஸ் இயக்கம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் தென் மாவட்டங்கள் செழிக்கும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தடைப்பட்டு இருந்தது.

 

1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அன்றைய காலகட்டத்தில் வைகோ மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த சேது சமுத்திரத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது. புதிய தொழில் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும். தொழில் வளர்ந்தால் இங்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அதன் பிறகு அரசியல் காரணங்களால், சனாதன மதவாத சக்திகளால் நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. திமுக சார்பில் கலைஞர் சார்பில் மறுபடியும் கொண்டு வர நினைக்கும் பொழுது பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தார்கள். இன்று சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்றைய முதல்வர் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையாக வைத்திருக்கிறார்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஆளுநரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரை வைகோ, “ஆளுநர் செயல்பாட்டை பொறுத்தவரை பாஜகவிற்காக  நன்றாக செயல்படுகிறார். இரட்டைத் தலைமை என்று சொல்வார்களே, அது போல பாஜகவிற்கு அண்ணாமலை தலைவராக இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் ரவியும் தமிழக பாஜகவிற்கு தலைவராக இருக்கிறார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள், குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட இப்படிப்பட்ட முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திக் கொண்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு, ஒரு சனாதன சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.