Skip to main content

“மகளிருக்கு ரூ. 2,500” - தெலுங்கானாவில் சோனியா வாக்குறுதி

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Rs. 2,500 For  woman” - Sonia promised in Telangana

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. 

 

அந்த வகையில் தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இன்று தெலுங்கானாவில் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

“Rs. 2,500 For  woman” - Sonia promised in Telangana

 

இதில் பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, “ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் ஏதாவது ஒரு வழக்கு உள்ளது. இ.டி, சி.பி.ஐ., வருமான வரித் துறை என இந்தப் பட்டியல் உள்ளது. ஆனால், தெலுங்கானா முதல்வர் மீது ஒரு வழக்கும் இல்லை. அதேபோல், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் மீதும் வழக்கு இல்லை. நரேந்திர மோடி அவரது நபர்களை தாக்கமாட்டார். நரேந்திர மோடி, உங்கள் முதல்வரையும், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியையும் தனதாக நினைக்கிறார். அதன் காரணமாகவே அவர்கள் மீது வழக்கு ஏதும் இல்லை” என்று பேசினார். 

 

தொடர்ந்து பேசிய காங்கிரஸின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, “தெலுங்கானா மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை தருகிறேன். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, காஸ் சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும், அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை, வீடுகட்ட ரூ. 5 லட்சம் மற்றும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் போலி வீடியோ விவகாரம்; காங்கிரஸ் முதல்வருக்கு சம்மன்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Summons the Congress Chief Minister on Amit Shah's fake video affair

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளை ரத்து செய்வோம்’ என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அந்த வீடியோவை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமித்ஷா பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையினர் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்று கண்டறியப்பட்டது. மேலும், அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Summons the Congress Chief Minister on Amit Shah's fake video affair

இதற்கிடையே, அமித்ஷாவின் போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரிந்ததாக கூறி தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்த் மின்னனு உபகரணங்களையும் மே 1ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் போது கொண்டு வர வேண்டும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளது. 

மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.