Skip to main content

“ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எங்கே எனத் தெரியவில்லை” - அண்ணாமலை மீது முன்னாள் பாஜக நிர்வாகி புகார்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

“Rs. 20 lakh items; I don't know where" former BJP executive complained about Annamalai

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் பழைய சோறு டாட் காம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். சென்னை, பாண்டிச்சேரி, கோவை என மூன்று ஊர்களில் நடத்தி வருகிறேன். கோவையில் எனக்கும் அந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே உள்ள விவகாரத்தின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அப்போது நான் பாஜகவில் இருப்பதால் அந்த உரிமையாளர் நேரடியாக பாஜக தலைவர் அண்ணாமலையை சென்று பார்க்கிறார். அங்கு உரிமையாளர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை. 

 

உடனடியாக மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமியை, அண்ணாமலை தொடர்பு கொண்டார். இதன் பின் மாவட்ட நிர்வாகிகள் உத்தம ராமசாமி தலைமையில் வந்து எனது அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் திருடி அங்கு பாஜக கொடியை நட்டு பாஜக போர்டு வைத்துள்ளார்கள். அதில் பாஜக சேவை மையம் என வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட சேவை செய்வார்கள் எனத் தெரிந்திருந்தால் அந்தக் கட்சிக்கே நான் வந்திருக்கமாட்டேன். சொந்த கட்சிக்காரர்களை என்ன ஏதென்று கேட்காமல் என்னையும் விசாரிக்காமல் முழுக்க முழுக்க ஆட்களை வைத்து உடைத்துள்ளார்கள். இப்போது 20 குண்டர்கள் அங்குள்ளார்கள். நான் போனாலும் என்னை உள்ளே விடாமல் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள்.

 

கடைக்கு நான் கொடுக்க வேண்டிய தொகை 5 லட்சமாகவே இருக்கட்டும். நீதிமன்றம் என்னை குற்றவாளி எனச் சொன்னால் நான் சிறை செல்லத் தயாராக உள்ளேன். வழக்கு இருக்கும் போது அங்கு எப்படி பொருட்களை எடுக்க முடியும். அதை உடைக்க முடியும். கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக நேற்று காலைதான் தெரியும். யார் நீக்கினார்கள் என்றெல்லாம் தெரியாது. இந்த விவகாரத்தில் நேரடியாக அண்ணாமலை இணைந்துள்ளார். நான் அவர் மேல்தான் புகார் அளித்துள்ளேன். மொத்த பொருட்களின் மதிப்பு 20 லட்சம். அதை எங்கு வைத்துள்ளார்கள் என்பது கூடத் தெரியவில்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.