Skip to main content

தேர்தல் குறித்த கேள்வி: “நன்றி, வணக்கம்” என்று நழுவிய நயினார் நாகேந்திரன்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Question of election; "Thank you, hello," said Nayanar Nagendran

 

திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். 

 

விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு பட்ஜெட்டில் கிள்ளிகுளத்தில் மட்டும் 15 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். திமுக கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டங்கள் தான். ஆனால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை குறிப்பாக குமரி மாவட்டம் என்பது முழுவதும் நஞ்சையாகவும் தென்னையாகவும் இருக்கும் மாவட்டம். நாஞ்சில் நாடு எனச் சொல்வார்கள். அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் நஞ்சை அதிக அளவில் உள்ளது. இப்பகுதிகளில் நெல் ஆராய்ச்சி மையம் ஏற்கனவே இருந்து, இப்பொழுது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதைக் குறித்தும் சட்டமன்றத்தில் நிச்சயமாக பேசுவோம். 

 

திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே நான் சொல்லியுள்ளேன். முதலமைச்சரை இதற்கு முன் சந்திக்கும் போது, வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு உள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது எனச் சொன்னேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும் போது இதுகுறித்து கண்டிப்பாகப் பேசுவேன். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். மற்ற ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 

 

அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதனுடன் தான் கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் பெரிய கட்சி, உலகளவில் அதிக எம்.எல்.ஏக்கள், அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சி பாஜக. இரு கட்சிகளுக்குள்ளும் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கீழ்மட்டத்தில் உள்ள சிலர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரிய கட்சி என்கிற போது இம்மாதிரியான சிக்கல்கள் இருக்கும். அது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தலில் வேட்பாளர்கள் அறிவித்த பின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை பார்க்கும் போது எவ்விதமான கருத்தும் மனமாட்சிமைகளும் நிச்சயம் இருக்காது” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், வரும் தேர்தலில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபொழுது நயினார் நாகேந்திரன் நன்றி வணக்கம் எனக் கூறி நழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.