Skip to main content

அதிமுகவுக்கு தோல்வியே ஏற்படும்... வ.உ.சி. பேரவை மறியல்...

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

தமிழக முதல்வரைக் கண்டித்து அகில் இந்திய வ.உ.சி. பேரவை திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு எல்லாரும் நாங்க தான் வேளாளரும் நாங்க தான் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

 

மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எடப்பாடி அரசுக்குத் தோல்வியே ஏற்படும் என்று வ.உ.சி. பேரவையின் பெண்கள் அணி பிரிவைச் சேர்ந்த மீனா கோஷம் எழுப்ப, தங்களுடைய ஓட்டு எடப்பாடி அரசுக்கு இல்லை என்றும் உறுதிப்படத் தெரிவித்தனர். 

 

Tiruchirappalli

 

இதற்கிடையில் வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சாலையில் அமர்ந்தனர். இதனை காவல்துறையினர் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசுக்கும் வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி சுமார் 50க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

 

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தப்பித்து ஓடிய காட்சி திருச்சியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறை வ.உ.சி. அமைப்பினரை விரட்டி பிடித்து கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வ.உ.சி. பேரவையைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்ய பெண் காவலர் முயன்றபோது, அவர் மீது கையில் வைத்திருந்த மது பாட்டிலைக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதனால் காவல் துறையும் தங்களுடைய வேகத்தைத் துரிதப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.