Skip to main content

“5000 இடங்களில் போராட்டம்; இதுதான் கட்சியின் அடுத்த குறி” - அண்ணாமலை நெக்ஸ்ட் ப்ளான்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

“Protest at 5000 places across Tamil Nadu; This is the next mark of the party” - Annamalai

 

தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக சில விஷயங்களைப் பேசுவதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். அதில் முதலாவதாக பாதுகாப்புப் பணியிலிருந்த ராணுவ வீரரை அச்சுறுத்தி, ‘உங்கள் குடும்பத்தினர் இங்கு இருக்கிறார்கள்.. பார்த்துக்கிறோம்’ என்று சொல்லும் அளவிற்கு இங்கு சட்டம், ஒழுங்கு இருக்கிறது.

 

எந்தப் பிரச்சனையானாலும் என் செல் நம்பரை தொடர்பு கொண்டு என்னை கூப்பிடலாம். எந்த உதவியாக இருந்தாலும் தமிழகத்தில் அதை செய்ய பாரதிய ஜனதா கட்சி கடமைப்பட்டுள்ளது எனச் சொன்னேன். 

 

சுற்றுப்பயணம் என்று சொல்வதை விட தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தில் உள்ள மனிதர்களைச் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு சென்றுள்ளது எனப் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் இந்தப் பயணத்தை ஆரம்பித்து முடித்துவிட வேண்டும் என்பது ஆசை. அதற்காக ஒரு குழுவினை அமைத்து ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

 

கட்சிக்கு ஒரு குறிக்கோள் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் அடுத்து நடக்கும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என்று. இது கட்சிக்கு இருக்கும் சவாலும் கூட” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.