Skip to main content

"அவரே மூன்றாவது முறை தமிழகம் வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்; இப்ப போய் பாதுகாப்பு சரியில்லையாம்" - டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

 'The Prime Minister is planning to come to Tamil Nadu for the third time; does it mean that the security is not good now?'- DKS Elangovan interview

 

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அண்மையில் திமுகவின் பொதுக்குழு நடந்திருந்த நிலையில் பொதுக்குழுவை அடுத்து முதன்முறையாக கூட்டப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்ற நிலையில் இது முக்கியத்துவம் பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் முறையில் முடிந்து. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பேராசிரியர் நூற்றாண்டு விழா குறித்த கூட்டமாக இருந்தது. கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்ப்பது, மாணவர்களை; இளைஞர்களை ஊக்கப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேராசிரியர் எந்த லட்சியத்தோடு பாடுபட்டாரோ, அந்த லட்சியம் இன்றைக்கும் தேவைப்படுகிற லட்சியமாக இருக்கின்ற நிலையில், எதிரிகள் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர். அதனால் லட்சியங்களை, கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது.

 

பிரதமர் இங்கு வந்து பார்த்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி போய் விட்டு அதன் பிறகு பிறகும் தமிழகம் வந்துவிட்டு மீண்டும் ஒருமுறை தமிழகம் வருவதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்ப போய் அன்னைக்கு பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் அவர் ஒரு போலீஸ் ஆபீஸரா? பிரதமர் பாதுகாப்பு என்றால் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இங்கே வந்து பாதுகாப்பு பணிகளை எல்லாம் மேற்பார்வையிட்டு குறை இருந்தால் சொல்லி சரி செய்து விடுவார்கள். பிரதமர் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விடுவார்கள். எல்லாம் முடிந்த பிறகு பிரதமருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் டெல்லியில் உள்ள பிரதமருடைய பாதுகாப்பு படையினர் ஏதாவது தப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்கிறாரா? நான் நேற்று வேடிக்கையாக சொன்னது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேல ஏதாவது வருத்தம் இருக்கிறதா? என்று எனக்கு புரியவில்லை'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.