Skip to main content

மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை இளைய சகோதரர்போல பாவித்தார்... -பியுஷ் கோயல்

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

பாஜக யாருடன் கூட்டணி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணி வலுவானதாக இருக்கும் இது பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளேன். கூட்டணி குறித்து சரியான நேரத்தில் நல்ல செய்தி வெளியாகும். தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு தொடர்ந்து செயல்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை இளைய சகோதரர்போல பாவித்தார். பிரதமர் மோடியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சிறப்பான நட்பைக் கொண்டிருந்தனர்,. 

சார்ந்த செய்திகள்