Skip to main content

''திமுக அரசின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்'' - திருமாவளவன் பேட்டி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

"People's recognition of DMK government's good governance"- Thirumavalavan interview

 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணியைச் சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''பாஜகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்த தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஐந்து சுற்று எண்ணிக்கை முடிந்திருக்கிறது. 5 சுற்று எண்ணிக்கையிலே 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் இருக்கிறார். ஏறத்தாழ 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதை உணர முடிகிறது.

 

கடந்த இரண்டு ஆண்டுகால திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்திற்கு மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விசிக சார்பில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி அங்கீகாரம் வழங்கக்கூடிய ஒரு முடிவை மகத்தான வெற்றியை வழங்கி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு நன்றி. இது காங்கிரசுக்கான வெற்றி என்பதை விட காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியாக அமைந்திருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோழி திருடிய வழக்கு; நகரத்தில் குவிந்த 1000 போலீஸார்! 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Chicken theft case; 1000 police gathered in the city!
மாதிரி படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக  கடந்த மாதம் 21 ஆம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை கண்டித்தும் வழக்கை நீக்க கோரியும் நேற்று (7ம் தேதி) கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் நேற்று ஊர்வலம், பேரணி,  ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். அதேபோல் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர். 

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோபி பேருந்து நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பினர். அதேபோல், வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதித்தனர். இதனால் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.