Skip to main content

'நுபுர் சர்மா விவகாரம்... உச்சநீதிமன்றத்தின் கருத்து ஆறுதல் அளிக்கிறது...''- மஜகவின் தமிமுன் அன்சாரி கருத்து!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

"The Nubur Sharma issue... Supreme Court's opinion is comforting..." - Mjk's Tamimun Ansari!

 

பாஜக பிரமுகர் நுபுர் சர்மா தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ''உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'உலகம் எங்கும் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திப் பேசிய அவரது கருத்து, உலக அளவில் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  நாடெங்கிலும் எதிரொலித்து வருகிறது. அது சார்ந்த போராட்டங்களும் நீடித்து வருகிறது. இதனிடையே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அவரை பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், அவரது கருத்தை ஆதரித்துப் பதிவிடும் போக்கும் அதிகரித்திருக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக யார், எதை பேசினாலும், அவர்களை பாதுகாக்க அதிகார மையம் இருக்கிறது என்ற துணிச்சல்தான் இதற்கு காரணமாகும்.

 

mjk

 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவை கடும் வார்த்தைகளால் கண்டித்திருக்கிறது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்றும், நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கி விட்டார் என்றும், அதன் விளைவே உதய்பூர் படுகொலை சம்பவம் என்றும், தனது சர்ச்சை பேச்சுக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

 

இது அவருக்கு மட்டும் விடுத்துள்ள நீதித்துறையின் கண்டனமாக பார்க்கக் கூடாது. அவரை பாதுகாப்பவர்கள், அவரது கருத்தை வழிமொழிபவர்கள், மத வெறியை தூண்டுபவர்கள், ஃபாஸிஸ்ட்டுகள் என அனைவருக்குமானதாக புரிந்துகொள்ள வேண்டும்.

 

உலகம் எங்கும் இந்திய திருநாட்டின் நற்பெயருக்கும், இந்திய பொது சமூகத்தின் கண்ணியத்திற்கும்   பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும். இதன் மூலம் இதுபோன்ற பொறுப்பற்றவர்கள் மேலும் மேலும் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் தூண்டாமல் இருக்க முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே அதன் நோக்கமாகும்.

 

கடும் சட்ட நடவடிக்கைகள் தவறும் போது, தனிநபர்களின் அராஜகங்கள் பெருகிவிடும் ஆபத்துகள் உருவாகிவிடும் அபாயம்  இருக்கிறது. நாட்டில் இணக்கமான பாரம்பரிய  சமூக அமைப்பு பாழ்பட இனியும் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் கூறிய இன்றைய கருத்துகள் அமைதியையும், ஒற்றுமையையும்  விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது. மேலும் மக்களை இணைக்கும் பல சமூக கடமைகள் குறித்தும் நல்லெண்ணத்தோடு அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

 

முக்கியமாக, அனைத்து மதவெறி சக்திகளுக்கும் எதிராக மக்களை சித்தாந்த ரீதியாக கட்டியெழுப்பும் தார்மீக கடமையை, அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியலைக் கடந்து முன்னெடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை  இத்தருணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.