Skip to main content

இபிஎஸ்-ஐ எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

minister senthil balaji against edppadi palainsamy statment in erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

 

ஈரோடு கிழக்கு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "பாஜகவும் அதிமுகவும் ரயில் தண்டவாளம் மாதிரி தான் சென்று கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவிற்கு அதிமுகவை விட்டால் நாதி இல்லை. அதிமுகவிற்கு பாஜகவை விட்டால் நாதி இல்லை. அதனால் தான் பாஜக அதிமுகவை மிரட்டி கையில் வைத்து உள்ளது. இது தான் இன்று இருக்கக்கூடிய சூழல். அதனால் இரண்டு பேரும் ஒன்றாகத் தான் இருப்பார்கள். ஒன்றாகத் தான் தேர்தலைச் சந்திப்பார்கள். இவர்கள் என்ன கருத்துகள் பேசுகிறார்கள்; நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்; எந்தெந்த மசோதாக்களை ஆதரிக்கிறார்கள் என்று மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களின் கொடியை அவர்களும் அவர்களின் கொடியை இவர்களும் தங்கள் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதில்லை. இது எல்லாம் மக்களுக்கு தெரியாமலா இருக்கிறது.

 

இன்று வரைக்கும் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் கையெழுத்து இடாமல் நிலுவையில் இருக்கிறது. அதிமுக இதனைப் பற்றி பேசலாம் இல்லையா. இளைஞர்கள் பணத்தை இழந்து பலியாகின்றனர். இதற்கு குரல் கொடுக்க முடியவில்லை. குரல் கொடுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. குரல் கொடுக்கும் அளவிற்கு முதுகெலும்பு இல்லை. நாட்டின் நலனுக்காக கட்சியை நடத்த வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தன்னை முன்னிறுத்தி கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை; தகுதி இல்லை. இதோடு அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் வேறு விதமான எதிர்மறையான கருத்தை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.